தடுப்பூசி போட சாமியாடிய மூதாட்டி! வைரல்

corona injection - 2026

100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது புதுச்சேரி அரசு.

தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், தன்வந்தி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போடுவதற்கு ஊக்கமளித்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியினரிடம் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றும் வேல்விழி என்னும் பெண், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கூறினார். அதற்கு அந்த பாட்டி செய்யும் அலப்பறை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்பட்ட அந்த வயதான தம்பதியினர் கொரோனா ஊசி (Corona Vaccine) போட்டுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தனர். சுகாதார ஊழியர் வற்புறுத்தியதால், அந்த பாட்டி, சாமி வந்தது போல் ஆடினார். அதைப் பார்த்து ஆடிப்போன சுகாதார ஊழியர் என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்றார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சரின் பெயரைச் சொல்லி, ரங்கசாமிக்கு தெரியும் என்று கூறி சாமியாடிய பெண்ணை மேலும் சமாளிக்க முடியாது என்று நினைத்து சுகாதார ஊழியர்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினார்கள்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும், பலரும் பலவிதமாக பதிலிட்டு நையாண்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மகளாக கேட்டுக் கொள்கிறேன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பி துரை மகள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தொற்றில் (Omicron Varrient) இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம் என்றும், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியே போடாதவர்கள் உடனடியாக முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories