spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தடுப்பூசி போட சாமியாடிய மூதாட்டி! வைரல்

தடுப்பூசி போட சாமியாடிய மூதாட்டி! வைரல்

- Advertisement -

100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது புதுச்சேரி அரசு.

தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், தன்வந்தி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போடுவதற்கு ஊக்கமளித்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியினரிடம் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றும் வேல்விழி என்னும் பெண், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கூறினார். அதற்கு அந்த பாட்டி செய்யும் அலப்பறை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்பட்ட அந்த வயதான தம்பதியினர் கொரோனா ஊசி (Corona Vaccine) போட்டுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தனர். சுகாதார ஊழியர் வற்புறுத்தியதால், அந்த பாட்டி, சாமி வந்தது போல் ஆடினார். அதைப் பார்த்து ஆடிப்போன சுகாதார ஊழியர் என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்றார்.

புதுச்சேரி முதலமைச்சரின் பெயரைச் சொல்லி, ரங்கசாமிக்கு தெரியும் என்று கூறி சாமியாடிய பெண்ணை மேலும் சமாளிக்க முடியாது என்று நினைத்து சுகாதார ஊழியர்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினார்கள்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும், பலரும் பலவிதமாக பதிலிட்டு நையாண்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மகளாக கேட்டுக் கொள்கிறேன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பி துரை மகள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தொற்றில் (Omicron Varrient) இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம் என்றும், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியே போடாதவர்கள் உடனடியாக முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe