சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை ..

சென்னையில் விதிகளை மீறி சீருடை அணியாமலும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விதிமுறைகள் மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. அவர்களில் பலர் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் சிலர் குடிபோதையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர் என போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, ஒழுங்கீனமாக செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.அதன்படி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையிலான போலீசார் சென்னை முழுதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டிய, 570 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, ஓட்டுனர் இருக்கையில் இரு நபர் பயணம் செய்தது தொடர்பாக, 189 பேர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், அதிக நபர்களை ஏற்றிச் சென்ற 148 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தவிர அதிக கட்டணம் வசூலித்த 42 பேர் பயணத்திற்கு வர மறுத்து அடாவடி செய்த ஒன்பது பேர் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவர் ஒருவர் என, மொத்தம், 959 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சென்னையில் விதிகளை மீறி, சட்டவிரோதமாக இயக்கப்படும் ‘ஷேர் ஆட்டோ’க்கள் மீதும் அதிரடி நடவடிக்கை துவங்கியுள்ளது. விதிகளை மீறி, வழித்தட பெயர்ப்பலகையுடன் இயக்கப்பட்ட 60 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 2 லட்சத்து, 40 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 14 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் கண்காணிக்க படவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

images 81 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories