சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை ..

Published:

சென்னையில் விதிகளை மீறி சீருடை அணியாமலும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விதிமுறைகள் மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. அவர்களில் பலர் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் சிலர் குடிபோதையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர் என போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, ஒழுங்கீனமாக செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.அதன்படி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையிலான போலீசார் சென்னை முழுதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டிய, 570 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, ஓட்டுனர் இருக்கையில் இரு நபர் பயணம் செய்தது தொடர்பாக, 189 பேர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், அதிக நபர்களை ஏற்றிச் சென்ற 148 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தவிர அதிக கட்டணம் வசூலித்த 42 பேர் பயணத்திற்கு வர மறுத்து அடாவடி செய்த ஒன்பது பேர் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவர் ஒருவர் என, மொத்தம், 959 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சென்னையில் விதிகளை மீறி, சட்டவிரோதமாக இயக்கப்படும் ‘ஷேர் ஆட்டோ’க்கள் மீதும் அதிரடி நடவடிக்கை துவங்கியுள்ளது. விதிகளை மீறி, வழித்தட பெயர்ப்பலகையுடன் இயக்கப்பட்ட 60 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 2 லட்சத்து, 40 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 14 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் கண்காணிக்க படவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

images 81 - 2026

Related articles

Recent articles

spot_img