ரமலான் தொழுகை.. இருதரப்பினரிடையே பயங்கர தாக்குதல்!

Published:

Kanyakumari muslims - 2026

ரமலான் சிறப்பு தொழுகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பு இஸ்லாமியர்களிடையே அடிதடி மோதல் நடைபெற்றதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரியில் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் இருந்துவருகிறது. அப் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் இரு தரப்பாக தொழுகை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் ரமலான் சிறப்பு தொழுகை முடித்தனர். நேற்று மற்றொரு தரப்பினர் தொழுகை நடத்துவதாக இருந்ததையடுத்து, பிரச்சனை ஏற்படும் என்று கருதி, முந்தைய இரவு காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காவல் நிலையத்திற்கு வெளியே இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியது,

இதனால் ஒருவரை ஒருவர் வெறி கொண்டு தாக்கிக் கொண்டனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இச்செய்தி அறிந்த அப்பகுதியிலுள்ள சில இஸ்லாமியர்கள் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img