ஓணம் பண்டிகை: விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகரிப்பு?!..

images 88 - 2026

திருவோணம் பண்டிகையையொட்டி விமானங்களில் பயணச்சீட்டின் விலை 10 மடங்கு வரை அதிகரித்து விற்கப்படுவதாக கேரள எம்.பி. சிவதாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் ஓணம் பண்டிகை மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல், மிக பிரமாண்டமாக இந்தாண்டு ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக விமான பயணச்சீட்டின் கட்டணம் 10 மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக கேரள எம்.பி. குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“ஓணம் பண்டிக்கையை கொண்டாட அனைத்து கேரளத்தினரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை விமான நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்கான நிகழ்வாக மாற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட சில வழிதடங்களில் மட்டும் விமானக் கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளனர். இதனால், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் மூலம் வீடு திரும்புவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஓணம் முடிந்து கேரளத்திலிருந்து அதிகமானோர் கிளம்பவுள்ள நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விமானங்களின் பயணச்சீட்டு கட்டணமானது 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயணக் கட்டணப் பட்டியலை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும். இது பயணிகளின் உரிமை. இந்த பிரச்னையில் நீங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories