பொங்கல் கொண்டாட்டத்திற்கு சரக்கு ரெடி..வாங்க ரெடியா?

images 49 1 - 2026

ஜன15 தை பொங்கலை தொடர்ந்து 16-ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வார விடுமுறையில் தொடர்ந்து பொங்கல் வருவதால் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை மும்முரமாக துவங்கி நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் இந்த முறை வருகிறது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை போகிப்பண்டிகையும் விடுமுறையில் வருகிறது. பண்டிகை நாட்கள் வார விடுமுறையில் வருவதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொங்கலுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து 16-ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறையும் அதனை சார்ந்த கொண்டாட்டங்களுக்கும் குறைவும் இருக்காது. பொங்கல் பண்டிகை நாளைவிட காணும் பொங்கல் தினத்தில் தான் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அமோகமாக இருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வார விடுமுறையில் தொடர்ந்து பொங்கல் வருவதால் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 12 நாட்களுக்குரிய மதுபானங்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதால் கிராமப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை பல்மடங்கு அதிகரிக்கும் என்பதால் இருப்பு அதிகளவு வைக்க வேண்டும் என அதிகாரிகள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் மது விற்பனை தொடங்குவதால் இன்று இரவுக்குள் அனைத்து கடைகளிலும் தேவையான அளவு ‘சரக்கு’ இருப்பு வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் முழு அளவில் மதுபானங்கள் நிரப்பப்படுகின்றன. நாளை மாலையில் இருந்து மது விற்பனை சூடு பிடிக்கத்தொடங்கும். திங்கட்கிழமை கடைகள் மூடப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை சுமார் ரூ.500 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரிநாள் அன்று நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்கும் வகையில் முன்னதாகவே மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விற்பனை தீவிரமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவுக்கு இருப்பு வைக்கப்படுகிறது. மொத்தமாக பெட்டி பெட்டியாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதால் பகல் முழுவதும் விற்பனை மும்முரமாக இருக்கும். கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் செல்கின்ற அந்த நாளில் மது விற்பனை இரவு வரை படுஜோராக இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் பொங்கல் பண்டிகை மதுவிற்பனை நாளை தொடங்கி 17-ந்தேதி வரை அமோகமாக இருக்கும் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் தவிர ஓட்டல்களில் உள்ள பார்களிலும் கூட்டம் நிரம்பி வழியக்கூடும். மேலும் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை ஓட்டல்களில் மது விற்பனைக்கு அனுமதி இருப்பதால் அங்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories