spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அதிமுக மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் ..

அதிமுக மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் ..

- Advertisement -

அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதிமுக சார்பில் நடைபெறக்கூடிய முதல் மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து வருவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் சிவகாசி உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது .

இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி தங்கமணி கே.பி முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு கூட்டம் நடைபெறுவதற்கான காரணம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம்போல் நகைச்சுவை உணர்வோடு பேச்சுக்களை தொடங்கினார் சாப்பாட்டிற்கு நேரம் ஆகிவிட்டதால் ஒருவர் மணியை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒருவர் பின்பக்க கதவை திறந்து செல்கிறார் ஒருவர் இந்த கதவை திறந்து செல்கிறார் சண்டாள பாவிகளா பயலுகளா இப்படியாடா இருக்கீங்க என்று நகைச்சுவையோடு பேசி அரங்கத்தை மகிழ்வித்தார்.

53 ஆண்டுகளுக்கு முன்னர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்குதேர்தல் கமிஷன் தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது இன்று வரை தமிழகத்தில் அதிக முறை ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டுஅதிமுகவுக்கு நிரந்தர பொதுச் செயலாளரை தெய்வம் தான் தந்துள்ளது ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

S.P. வேலுமணி பேசியதாவது.வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் யார் நன்றாக பேசுவார்கள் என்று எண்ணிய போது கே டி ராஜேந்திர பாலாஜி நன்றாக பேசுவார் என்று , சொல்லி அவர் பேசினார். நான் எத்தனையோ பேச்சைக் கேட்டு இருக்கிறேன்.அந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலினை பற்றி அவ்வளவு கடுமையாக பேசினார். உண்மையை பேசினார்.2. மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கும்போது என்னென்ன பண்ணாரு தெரியும். எடப்பாடி அற்புதமா ஆட்சி செஞ்சார்.பத்திரிகைகளை அடிமையா வச்சி எடப்பாடிக்கு எதிராக இருபதாயிரம் போராட்டங்களை நடத்தி ,ஆட்சியை என்னென்னமோ செஞ்சு இந்த ஆட்சியை கலைக்கணும்னு நினைச்சாரு.3. அதன் பின்பு கோயமுத்தூரில் என்னுடைய தொகுதியில் , கே டி ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை பற்றி கடுமையாக பேசினார்.

அதற்காக தான் அவருக்கு வழக்கு.அது ஒன்னுமே இல்லாத வழக்கு. திமுக அமைச்சர்கள் இன்னைக்கு பார்த்த கோடி கோடியா கொள்ளை அடிக்கிறாங்க. அவரப் பிடிக்க எத்தனையோ தனிப்படையினர் அமைச்சாங்க . அவர் பேசுனது என்ன ஸ்டாலின் போய் குற்றாலத்தில குளிச்சிட்டு வந்தா அவரு முடியோட வர்றாரா எப்படி வராரு பார்போம் என்று இதுதான் அவர் பேசுனது. ஸ்டாலின் உண்மையான நிலையை அவர் இயல்பான வாழ்க்கையை பற்றி தான் பேசினார். கே டி ராஜேந்திர பாலாஜி கட்சிக்காக துணிச்சலாக பேசி பொய் வழக்குகளை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,164FansLike
387FollowersFollow
92FollowersFollow
0FollowersFollow
4,899FollowersFollow
17,300SubscribersSubscribe