மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி உயரத்தைக் குறைக்க வேண்டுமாம்: விநோத மனு!

courtallam - 2026

தமிழகத்திற்கு போதுமான அளவு மழை இல்லாத காரணத்தால், மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விநோதமாகப் பார்க்கப் பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொது நல மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில், தென்மேற்குப் பருவ மழை இந்தியா முழுவதும் பெய்தாலும், தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலை தான்.

தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்களை, தமிழகத்துக்குள் நுழைய விடாமல் மேற்குத் தொடர்ச்சி மலை தடுக்கின்றது. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கு அதிகம் கிடைப்பதில்லை.

மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால், தென்மேற்குப் பருவ மழை கேரளாவுக்கு அதிக மழைப் பொழிவைக் கொடுப்பதுடன், 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே இதற்குக் காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைத்தால், தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கும் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை எதிர் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது –  என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மழைக்காக என்று கூறி, ஒரு மலையையே வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் விநோதமான மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் போன்றவற்றால்தான், இதுபோன்ற மழைப் பொழிவுகள் தமிழகத்தில் கிடைக்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலை, மரங்கள் அதிகம் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதி. இந்த மரங்களாலும் குளிர்ந்த தன்மையாலும்தான், பருவ காலங்களில் மேகங்கள் உற்பத்தி ஆகின்றன.  மலையின் உயரத்துக்கும் பருவ மழைக் கால மேகங்கள் தடுக்கப் படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெரிதும் அழிக்கப் பட்டு விட்டன. மண் குவாரி என ஆறுகள் மலடாக்கப் பட்டுள்ளன. ஆற்றின் கரைகள் சுருக்கப் பட்டு, ஆக்கிரமிப்புகள் மேலோங்கி, பிளாட்டுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான விவசாய விளை நிலங்கள் மலடாக்கப்பட்டு, பிளாட்டுகள் ஆகியுள்ளன. குளங்களில் தண்ணீர் தேங்க விடுவதில்லை. ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டு, அதனுள்ளும் வீடு கட்டி, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என ஏரிகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு வழிமுறைகளை எவரும் மதிப்பதில்லை. அதுபோல், மலைகளை வெட்டி கபளீகரம் செய்து, குவாரிகளால் நிரப்பி, சல்லி கற்களையும் பாறைகளையும் வெட்டி எடுத்து, அந்தப் பகுதிகளை மேலும்  வறட்சியான பகுதியாக்கி விடுகின்றனர். சிறு சிறு குன்றுகள் இன்று இருந்த  இடம் தெரியாமல் அழிக்கப் பட்டு விட்டன.

தமிழகத்தில் விவசாய நிலங்கள் பெருமளவு அழிய இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திமுக., மேற்கொண்ட சதி வேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில், இது சாத்தியமற்ற வெற்று கற்பனை என்று புறந்தள்ளினாலும், மழை என்ற காரணத்தைக் கூறி, மேற்குத் தொடர்ச்சி மலையையும் கல் குவாரிகளால் நிரம்பியதாக்க சதி வலை பின்னப்படுகிறது என்று பலரும் விவாதிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories