மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி உயரத்தைக் குறைக்க வேண்டுமாம்: விநோத மனு!

courtallam - 2026

தமிழகத்திற்கு போதுமான அளவு மழை இல்லாத காரணத்தால், மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விநோதமாகப் பார்க்கப் பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொது நல மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில், தென்மேற்குப் பருவ மழை இந்தியா முழுவதும் பெய்தாலும், தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலை தான்.

தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்களை, தமிழகத்துக்குள் நுழைய விடாமல் மேற்குத் தொடர்ச்சி மலை தடுக்கின்றது. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கு அதிகம் கிடைப்பதில்லை.

மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால், தென்மேற்குப் பருவ மழை கேரளாவுக்கு அதிக மழைப் பொழிவைக் கொடுப்பதுடன், 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே இதற்குக் காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைத்தால், தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கும் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை எதிர் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது –  என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மழைக்காக என்று கூறி, ஒரு மலையையே வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் விநோதமான மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் போன்றவற்றால்தான், இதுபோன்ற மழைப் பொழிவுகள் தமிழகத்தில் கிடைக்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலை, மரங்கள் அதிகம் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதி. இந்த மரங்களாலும் குளிர்ந்த தன்மையாலும்தான், பருவ காலங்களில் மேகங்கள் உற்பத்தி ஆகின்றன.  மலையின் உயரத்துக்கும் பருவ மழைக் கால மேகங்கள் தடுக்கப் படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெரிதும் அழிக்கப் பட்டு விட்டன. மண் குவாரி என ஆறுகள் மலடாக்கப் பட்டுள்ளன. ஆற்றின் கரைகள் சுருக்கப் பட்டு, ஆக்கிரமிப்புகள் மேலோங்கி, பிளாட்டுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான விவசாய விளை நிலங்கள் மலடாக்கப்பட்டு, பிளாட்டுகள் ஆகியுள்ளன. குளங்களில் தண்ணீர் தேங்க விடுவதில்லை. ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டு, அதனுள்ளும் வீடு கட்டி, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என ஏரிகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு வழிமுறைகளை எவரும் மதிப்பதில்லை. அதுபோல், மலைகளை வெட்டி கபளீகரம் செய்து, குவாரிகளால் நிரப்பி, சல்லி கற்களையும் பாறைகளையும் வெட்டி எடுத்து, அந்தப் பகுதிகளை மேலும்  வறட்சியான பகுதியாக்கி விடுகின்றனர். சிறு சிறு குன்றுகள் இன்று இருந்த  இடம் தெரியாமல் அழிக்கப் பட்டு விட்டன.

தமிழகத்தில் விவசாய நிலங்கள் பெருமளவு அழிய இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திமுக., மேற்கொண்ட சதி வேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில், இது சாத்தியமற்ற வெற்று கற்பனை என்று புறந்தள்ளினாலும், மழை என்ற காரணத்தைக் கூறி, மேற்குத் தொடர்ச்சி மலையையும் கல் குவாரிகளால் நிரம்பியதாக்க சதி வலை பின்னப்படுகிறது என்று பலரும் விவாதிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories