December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

jayalalitha karunanidhi - 2025

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.

இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில் கட்டியாண்ட இருவருக்குள்ளும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. 1989ல் திமுக, ஆட்சியில் இருந்த போது, ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பை பிடித்திழுத்து ரகளை செய்து, சட்டமன்ற வரலாற்றில் ஓர் அசிங்கத்தை திமுக.,வினர் அரங்கேற்றினர். தலைவிரிகோலமாக ஜெயலலிதா வெளியே ஓடி வந்த அந்தப் புகைப்படங்கள் அப்போது அவருக்குப் பெரும் அனுதாபத்தைத் தோற்றுவித்தது.

தொடர்ந்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பின்னர் 1996ல் வந்த திமுக., ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதில் முனைப்பு காட்டியது. தொடர்ந்து அவரை சிறையில் தள்ளுவதில் உன்னிப்பாக இருந்தது.

அடுத்து ஜெயலலிதா வந்த போது திமுக; தலைவரை நள்ளிரவுக் கைதில் தள்ளியது. தொடர்ந்து பழிவாங்கல்களும், ஒருவரை ஒருவர் விரோதிகளாய்ப் பார்ப்பதும், இரு கட்சிகளுக்குள்ளும் மற்ற கட்சியிடம் யாராவது தொடர்பு கொண்டிருந்தாலோ, பார்த்துப் புன்னகைத்தாலோ கூட பழி வாங்கப் படுவதும் சகஜமாக இருந்தது.

இப்படி எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகளுக்குள்ளும் ஜெயலலிதா மறைவின் பின் ஒரு சுமுக நிலை வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசத் தொடங்கினர். கருணாநிதிக்காக அதிமுக.,வினரிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு  அதிமுக.,வினரிடையே இருந்த திரைகள் அகன்றன.

இப்படி எதிரும் புதிருமாக இருந்தாலும்,  இறப்பில் இருவரும் ஒற்றுமைய வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கருணாநிதிக்காகவே அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா சொன்னார். ஜெயாலலிதா அரசியலை எதிர்கொள்வதே தன் அரசியல் என்று தன் கடைசிக் கட்டத்தில் மாறிப் போனார் கருணாநிதி. ஜெயலலிதா மறைந்த பின், கருணாநிதி மௌனியானார். ஓய்வறியாமல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய கருணாநிதிக்கு உடல் நலன் இயற்கையில் அதைச் செய்தது!

இப்படி சில விநோதங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் போது, இன்னோர் அம்சமாய் அவர்கள் இருவரது இறப்பு தேதி அமைந்தது.

ஜெயலலிதாவின் இறப்பு நாள் கூட்டலும் , கருணாநிதியின் இறப்பு நாள் கூட்டலும் ஒன்றாக அமைந்தது. நியூமராலஜி பார்ப்பவர்கள் இதையும் கண்டறிந்து அதிசயிக்கின்றனர்.

ஜெயலலிதா மறைந்தது – 5.12.2016 இல்! இதன் கூட்டுத் தொகை  =2033

அதுபோல், கருணாநிதி மறைந்தது 7.8.2018 இதன் கூட்டுத் தொகை 2033.

இந்த இரு எண்களின் கூட்டுத் தொகை அதாவது 2+0+3+3 = 8. எண் எட்டு என்பது சனைச்சரனுக்கான எண் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories