ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!

jayalalitha karunanidhi - 2026

சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்  திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.

இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில் கட்டியாண்ட இருவருக்குள்ளும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. 1989ல் திமுக, ஆட்சியில் இருந்த போது, ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பை பிடித்திழுத்து ரகளை செய்து, சட்டமன்ற வரலாற்றில் ஓர் அசிங்கத்தை திமுக.,வினர் அரங்கேற்றினர். தலைவிரிகோலமாக ஜெயலலிதா வெளியே ஓடி வந்த அந்தப் புகைப்படங்கள் அப்போது அவருக்குப் பெரும் அனுதாபத்தைத் தோற்றுவித்தது.

தொடர்ந்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பின்னர் 1996ல் வந்த திமுக., ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதில் முனைப்பு காட்டியது. தொடர்ந்து அவரை சிறையில் தள்ளுவதில் உன்னிப்பாக இருந்தது.

அடுத்து ஜெயலலிதா வந்த போது திமுக; தலைவரை நள்ளிரவுக் கைதில் தள்ளியது. தொடர்ந்து பழிவாங்கல்களும், ஒருவரை ஒருவர் விரோதிகளாய்ப் பார்ப்பதும், இரு கட்சிகளுக்குள்ளும் மற்ற கட்சியிடம் யாராவது தொடர்பு கொண்டிருந்தாலோ, பார்த்துப் புன்னகைத்தாலோ கூட பழி வாங்கப் படுவதும் சகஜமாக இருந்தது.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

இப்படி எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகளுக்குள்ளும் ஜெயலலிதா மறைவின் பின் ஒரு சுமுக நிலை வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசத் தொடங்கினர். கருணாநிதிக்காக அதிமுக.,வினரிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு  அதிமுக.,வினரிடையே இருந்த திரைகள் அகன்றன.

இப்படி எதிரும் புதிருமாக இருந்தாலும்,  இறப்பில் இருவரும் ஒற்றுமைய வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கருணாநிதிக்காகவே அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா சொன்னார். ஜெயாலலிதா அரசியலை எதிர்கொள்வதே தன் அரசியல் என்று தன் கடைசிக் கட்டத்தில் மாறிப் போனார் கருணாநிதி. ஜெயலலிதா மறைந்த பின், கருணாநிதி மௌனியானார். ஓய்வறியாமல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய கருணாநிதிக்கு உடல் நலன் இயற்கையில் அதைச் செய்தது!

இப்படி சில விநோதங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் போது, இன்னோர் அம்சமாய் அவர்கள் இருவரது இறப்பு தேதி அமைந்தது.

ஜெயலலிதாவின் இறப்பு நாள் கூட்டலும் , கருணாநிதியின் இறப்பு நாள் கூட்டலும் ஒன்றாக அமைந்தது. நியூமராலஜி பார்ப்பவர்கள் இதையும் கண்டறிந்து அதிசயிக்கின்றனர்.

ஜெயலலிதா மறைந்தது – 5.12.2016 இல்! இதன் கூட்டுத் தொகை  =2033

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அதுபோல், கருணாநிதி மறைந்தது 7.8.2018 இதன் கூட்டுத் தொகை 2033.

இந்த இரு எண்களின் கூட்டுத் தொகை அதாவது 2+0+3+3 = 8. எண் எட்டு என்பது சனைச்சரனுக்கான எண் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories