இது பாதிக்கப்பட்ட பெண்ணின் அவலக் குரல்! சுப.வீ.க்கள் செவிகளில் விழாது!

vairamuthu subavee - 2026

வைரமுத்து – சின்மயி பாலியல் அழைப்பு கருத்து யுத்த விவகாரத்தில் திமுக.,வின் அதிகாரபூர்வ ஆஸ்தான அவைக்கவிஞர் என்பதாலும், கலைஞர் கருணாநிதிக்காக கால்பிடித்த கவிஞர் என்பதாலும் திமுக.,வின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தீப்பொறிக் குஞ்சுகள் இப்போது கவிஞருக்காக வரிந்து கட்டி இறங்கியிருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துச் சுதந்திரம் வெளிப்பட்டு வருகிறது.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடியொற்றி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஒரு கருத்தை தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தக் கருத்து பலத்த எதிர்ப்பைக் கிளப்பியதை அடுத்து, சுப.வீ., யோசித்து அந்தப் பதிவை நீக்கிவிட்டுள்ளார். அதைவிட, அந்தக் கருத்து ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்துவது போல் அமைந்ததால், அவருக்கே அது புரிந்து விட்டதால், அந்தப் பதிவை நீக்கியதாகக் கிசுகிசுக்கிறார்கள்!

subavee - 2026 subavee1 - 2026இதனிடையே, சுப.வீ.,யின் நெருங்கிய தோழர், ஒரே இயக்கத்தில் ஒன்றாய் அமர்ந்து பெண்ணியம் பேசித் திரிந்த தோழர் தியாகு குறித்து, அவரது மனைவி கவிஞர் தாமரை தனது வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்திய காலத்தில் கூறியிருக்கிறார். அந்தச் செய்திகள் இணைய உலகை அப்போதும் ஆக்கிரமித்திருந்தது. (காண்க … கவிஞர் தாமரை தாமரை கவிஞர் தாமரை )

பாதிக்கப் பட்ட பெண்ணாக தன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திய கவிஞர் தாமரை, இந்த நேரத்தில் வாய் திறந்து சுப.வீ.,க்கு பதில் சொல்வது போல் ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது! அது இதுதான்….

இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ?????..
தியாகுவும் சுபவீயும் தமிழ்தமிழர் இயக்கத்தில் பொ.செயலாளர், தலைவர் என ஒன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார்தான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இரண்டு பேருக்கும்…
இயக்கத்தின் பெயரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும்சாட்சி…

Kavignar Thamarai

thamarai fbpost - 2026
இயக்க ரீதியாக இப்போதும் செல்வாக்கை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு, அவரால் பாதிக்கப் பட்ட திரைப்படக் கவிஞர் உலகம் கைகொடுக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை!  ஆலமரத்தின் கீழ் சிறு செடிகள் முளைக்காது என்பது போல், கவிஞர் வைரமுத்து என்ற ஆலமரம் தன் கீழ் இருந்த சிறு கவிஞர்ச் செடிகளை அழித்து வளரவிடாமல் செய்து வளர்ந்துவிட்டதால், இப்போது சிறு செடிகள் எல்லாம் மரம் சாயும் நேரத்தில் தாங்கிப் பிடிக்க முன் வரவில்லை! காரணம் விழுதுகள் இல்லாமல் ஆலமரம் வெகு நாள் ஜீவித்திருக்க முடியாது அல்லவா!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories