உலகே பொய்; வாழ்வே பொய்; எல்லாம் பொய்! தத்துவவாதி ஆகிவிட்ட ராகுல்!

rahul cag report question - 2026

இந்த உலகமே பொய், வாழ்வே பொய், நீயும் பொய், நானும் பொய், அம்மா பொய், அப்பா பொய், பாட்டி பொய்… அக்கா பொய், நாடே பொய்.. எல்லாம் பொய் என்று உலகை உணர்ந்து கொண்ட தத்துவப் பேரறிஞர் ஆகியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்!

உச்ச நீதிமன்றம் பொய் சொல்கிறது..
முன்னாள் ஏர் மார்ஷல் பொய் சொல்கிறார்
தற்போதைய ஏர் மார்ஷலும் பொய் சொல்கிறார்
பிரான்ஸ் அதிபர் பொய் சொல்கிறார்
மத்திய அமைச்சர் பொய் சொல்கிறார்
மோடி பொய் சொல்கிறார்
இப்போது…
சிஏஜி அறிக்கையும் பொய்தான்!
எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என்று… சொல்பவர் பிணையில் சுற்றிக் கொண்டிருக்கும் சத்தியவாதி கலியுக அரிச்சந்திரன்!

கிட்டத்தட்ட உலகியல் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு வந்து, முற்றும் துறந்து வாழும் ஒரு சாமியாரின் நிலைக்கு வந்துவிட்டாரோ என்று சந்தேகப் படும் அளவுக்கு, அவருக்கு எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.

இன்று சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்துகள் இவை…

சிஏஜி அறிக்கை பொய்யானது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகர் போல் செயல்பட்டார். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள் அனில் அம்பானிக்கு எப்படி தெரியும். தனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கப் போகிறது என்பது அம்பானிக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது. ஆனால் மனோகர் பாரீக்கருக்கு தெரியாது… என்றெல்லாம் பேசினார்.

முன்னதாக சிஏஜி அறிக்கை எங்கே என்று கேட்டு வந்தார். அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்ததும், சிஏஜி அறிக்கையே பொய் என்று அடம் பிடிக்கிறார்.

3 COMMENTS

  1. Looks like Rahul has lost his balance and fear haunted. He could not accept a normal citizen from lower class like Modiji as P.M. It is a psychological impact in every rich man that makes them very very jealous of any virtue of any poor man. He is frustrated and may indulge in violence or go mad at a later date.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories