உலகே பொய்; வாழ்வே பொய்; எல்லாம் பொய்! தத்துவவாதி ஆகிவிட்ட ராகுல்!

rahul cag report question - 2026

இந்த உலகமே பொய், வாழ்வே பொய், நீயும் பொய், நானும் பொய், அம்மா பொய், அப்பா பொய், பாட்டி பொய்… அக்கா பொய், நாடே பொய்.. எல்லாம் பொய் என்று உலகை உணர்ந்து கொண்ட தத்துவப் பேரறிஞர் ஆகியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்!

உச்ச நீதிமன்றம் பொய் சொல்கிறது..
முன்னாள் ஏர் மார்ஷல் பொய் சொல்கிறார்
தற்போதைய ஏர் மார்ஷலும் பொய் சொல்கிறார்
பிரான்ஸ் அதிபர் பொய் சொல்கிறார்
மத்திய அமைச்சர் பொய் சொல்கிறார்
மோடி பொய் சொல்கிறார்
இப்போது…
சிஏஜி அறிக்கையும் பொய்தான்!
எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என்று… சொல்பவர் பிணையில் சுற்றிக் கொண்டிருக்கும் சத்தியவாதி கலியுக அரிச்சந்திரன்!

கிட்டத்தட்ட உலகியல் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு வந்து, முற்றும் துறந்து வாழும் ஒரு சாமியாரின் நிலைக்கு வந்துவிட்டாரோ என்று சந்தேகப் படும் அளவுக்கு, அவருக்கு எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.

இன்று சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்துகள் இவை…

சிஏஜி அறிக்கை பொய்யானது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகர் போல் செயல்பட்டார். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள் அனில் அம்பானிக்கு எப்படி தெரியும். தனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கப் போகிறது என்பது அம்பானிக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது. ஆனால் மனோகர் பாரீக்கருக்கு தெரியாது… என்றெல்லாம் பேசினார்.

முன்னதாக சிஏஜி அறிக்கை எங்கே என்று கேட்டு வந்தார். அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்ததும், சிஏஜி அறிக்கையே பொய் என்று அடம் பிடிக்கிறார்.

3 COMMENTS

  1. Looks like Rahul has lost his balance and fear haunted. He could not accept a normal citizen from lower class like Modiji as P.M. It is a psychological impact in every rich man that makes them very very jealous of any virtue of any poor man. He is frustrated and may indulge in violence or go mad at a later date.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories