பாகிஸ்தானுக்கு வக்காலத்து… ஜஸ்ட் டி.வி.,காமெடி ஷோவில் இருந்து சித்து நீக்கம்!

Navjot Singh Siddhu enters with the firangis on Oye Firangi - 2026

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாம் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ஒரு டிவி காமெடி ஷோவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். இதற்கு மக்களின் கொந்தளிப்பும் எதிர்ப்புமே காரணம்.

ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், ‘தி கபில் சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

வெள்ளிக்கிழமை நேற்று, இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய சித்து, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை குறை சொல்வீர்களா? தனி நபரை குற்றம் சாட்டுவீர்களா? இது கோழைத்தனமான தாக்குதல், இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்துக்குரியதுதான்! இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில், இந்த நிகழ்ச்சிக்கும் சித்துவுக்கும் கடும் கண்டனம் எழுந்தது! மேலும், இப்படி ஒரு தேசவிரோதக் கருத்தை தெரிவித்த சித்துவை நீக்க வேண்டும் என ஏராளமானோர் கூறினர். சித்து நீக்கப்படும் வரை நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றனர் சிலர். இதனால் இந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொள்வதால் ஏற்படும் சாதகத்தை விட பாதகமே மோங்கியிருந்ததால், இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை சித்துவிடம் தெரிவித்துவிட்டதாம்.

இருப்பினும் வழக்கம் போல், தமது கருத்து திரித்து கூறப்பட்டது என்றும், மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் சமாளித்துப் பார்த்தார் சித்து. ஆனால், எவரும் அவரது விளக்கத்தை ஏற்பதாக இல்லை! பயங்கரவாதத்துக்கு சாதி மதம் எல்லைகள் கிடையாது என்று கூறினேன் என சமாளித்துப் பார்க்கிறார்.! ஆனாலும் எவரும் அவரை நம்புவதாக இல்லை.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories