December 6, 2025, 6:55 PM
26.8 C
Chennai

பாகிஸ்தானுக்கு வக்காலத்து… ஜஸ்ட் டி.வி.,காமெடி ஷோவில் இருந்து சித்து நீக்கம்!

Navjot Singh Siddhu enters with the firangis on Oye Firangi - 2025

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாம் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ஒரு டிவி காமெடி ஷோவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். இதற்கு மக்களின் கொந்தளிப்பும் எதிர்ப்புமே காரணம்.

ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், ‘தி கபில் சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

வெள்ளிக்கிழமை நேற்று, இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய சித்து, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை குறை சொல்வீர்களா? தனி நபரை குற்றம் சாட்டுவீர்களா? இது கோழைத்தனமான தாக்குதல், இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்துக்குரியதுதான்! இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில், இந்த நிகழ்ச்சிக்கும் சித்துவுக்கும் கடும் கண்டனம் எழுந்தது! மேலும், இப்படி ஒரு தேசவிரோதக் கருத்தை தெரிவித்த சித்துவை நீக்க வேண்டும் என ஏராளமானோர் கூறினர். சித்து நீக்கப்படும் வரை நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றனர் சிலர். இதனால் இந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொள்வதால் ஏற்படும் சாதகத்தை விட பாதகமே மோங்கியிருந்ததால், இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை சித்துவிடம் தெரிவித்துவிட்டதாம்.

இருப்பினும் வழக்கம் போல், தமது கருத்து திரித்து கூறப்பட்டது என்றும், மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் சமாளித்துப் பார்த்தார் சித்து. ஆனால், எவரும் அவரது விளக்கத்தை ஏற்பதாக இல்லை! பயங்கரவாதத்துக்கு சாதி மதம் எல்லைகள் கிடையாது என்று கூறினேன் என சமாளித்துப் பார்க்கிறார்.! ஆனாலும் எவரும் அவரை நம்புவதாக இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories