பாகிஸ்தானுக்கு வக்காலத்து… ஜஸ்ட் டி.வி.,காமெடி ஷோவில் இருந்து சித்து நீக்கம்!

Navjot Singh Siddhu enters with the firangis on Oye Firangi - 2026

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாம் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ஒரு டிவி காமெடி ஷோவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். இதற்கு மக்களின் கொந்தளிப்பும் எதிர்ப்புமே காரணம்.

ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், ‘தி கபில் சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

வெள்ளிக்கிழமை நேற்று, இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய சித்து, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை குறை சொல்வீர்களா? தனி நபரை குற்றம் சாட்டுவீர்களா? இது கோழைத்தனமான தாக்குதல், இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்துக்குரியதுதான்! இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில், இந்த நிகழ்ச்சிக்கும் சித்துவுக்கும் கடும் கண்டனம் எழுந்தது! மேலும், இப்படி ஒரு தேசவிரோதக் கருத்தை தெரிவித்த சித்துவை நீக்க வேண்டும் என ஏராளமானோர் கூறினர். சித்து நீக்கப்படும் வரை நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றனர் சிலர். இதனால் இந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொள்வதால் ஏற்படும் சாதகத்தை விட பாதகமே மோங்கியிருந்ததால், இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை சித்துவிடம் தெரிவித்துவிட்டதாம்.

இருப்பினும் வழக்கம் போல், தமது கருத்து திரித்து கூறப்பட்டது என்றும், மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் சமாளித்துப் பார்த்தார் சித்து. ஆனால், எவரும் அவரது விளக்கத்தை ஏற்பதாக இல்லை! பயங்கரவாதத்துக்கு சாதி மதம் எல்லைகள் கிடையாது என்று கூறினேன் என சமாளித்துப் பார்க்கிறார்.! ஆனாலும் எவரும் அவரை நம்புவதாக இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories