
அமெரிகக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தயாவுக்கு ரூபாயை பெற்று கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டுட்ரம்ப பதியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்த்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தததிலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதர தடைகளை விதித்து வருகிறது.
எனினும் இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிகொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்க வழங்கியது.
இந்த அவகாசம் கடந்த மே 2ம் தேதியுடன் முடிடைந்த நிலையில் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர் கொள்ளுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவித்தது.
ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதி அளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வந்தது.
இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையாமல் தேவையான கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
இதனையடுத்து அமெரிக்காவை சமரசம் செய்யும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.
அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பாம்பியோவிடம் இது குறித்து பேசப்பட்டது. எனினும் ட்ரம்ப தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தொடர ஈரானும் விருப்பம் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் துாதா் அலிசேகேனி கூறியதாவது;
இந்தியாவுக்கு சகாயமான விலையில், கச்சா எண்ணெய் வழங்க ஈரான் எப்போதுமே விருப்பம் கொண்டுள்ளது.
நட்பு நாடான இந்தியாவின் நலனில் ஈரான் அக்கறை கொண்டுள்ளது.
எந்த நாடு தடை செய்தாலும், ஈரான்–இந்தியா நல்லுறவு, வர்த்தகம் பாதிக்கப்படாது.
இந்திய ரூபாயில் அல்லத ஐரோப்பிய கரன்ஸியில் கச்சா எண்ணெய் சப்ளை செய்திட தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார்.


