February 22, 2026, 8:33 AM
26.1 C
Chennai

சுபாஷிதம்: உயர்ந்த இலக்கு தேவை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

15. உயர்ந்த இலக்கு தேவை!

ஸ்லோகம்:

ஆயுர் வர்ஷ சதம் ந்ருணாம் பரிமிதம் ராத்ரௌ ததர்தம் கதம்
தஸ்யார்தஸ்ய பரஸ்ய சார்தமபரம் பாலத்வ்ருத்தத்வயோ: |
சேஷம் வ்யாதிவியோகது:கசஹிதம் சேவாதிபிர்னீயதே
ஜீவே வாரிதரங்கசஞ்சலதரே சௌக்யம் குத: ப்ராணினாம் ||

– பர்த்ருஹரி

பொருள்:

மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள். அதில் பாதி நேரம் இரவாக உறக்கத்தில் கழிகிறது. மீதி உள்ள ஐம்பது ஆண்டுகளில் இளமை, முதுமை இவற்றின் கீழ் 25 ஆண்டுகளும் மற்றும் உள்ள 25 ஆண்டுகள் வயிற்றுப்பாட்டுக்கும், பிறருக்கு சேவை செய்து பணியாற்றுவதிலும், நோய், துன்பம், துயரத்திலும் கடந்து போகிறது. நீரலை போல் கண நேரத்தில் கடந்துவிடும் மனித வாழ்வில் சுகம் ஏது?

விளக்கம்:

பிறத்தல், வளர்தல் கல்வி, திருமணம், வேலை, குழந்தைகள், அவர்களை வளர்த்தல், முதுமை, நோய், மரணம்… இவ்வளவு தான்! சாதாரணமாக வாழ்க்கை பலருக்கும் இப்படித்தான் கழிகிறது. இதில் சுகம் இல்லை என்கிறார் பர்த்ருஹரி. தேசத்திற்காக, சமுதாயத்திற்காக, மனித இனத்திற்காக வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

நூறாண்டு வாழ்க்கை எவ்வாறு கடக்கிறது? வாழ்க்கையின் இலக்கை அடைந்தோம் என்று திருப்தியைப் பெறுவதற்காக வாழ்க்கைப் பாதையை மாற்ற இயலுமா என்று யோசிக்க வைக்கும் சுபாஷிதம் இது. லட்சியத்தோடு கூடிய வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்பது தாத்பர்யம்.

நூறாண்டு வாழ்வில் நமக்கு மீதியிருக்கும் நாட்கள் எத்தனை? கடலில் அலைகள் குறைந்த பின் குளிக்கலாம் என்ற எண்ணம் நிறைவேற கூடியதா? தர்மச் செயல் செய்வதை ஒத்திப் போடுபவர்களுக்கு உண்மையான நலன் கிடைக்காது. நேரத்தை வீணடிக்காமல் நல்லவிதமாக செலவழிக்காவிட்டால் வாழ்க்கையை வீணாக்கியதற்காக பச்சாதாபம் அடைய வேண்டியிருக்கும்.

நன்மை அனைவருக்கும் வேண்டும். ஆனால் நாம் வாழும் விதம் அதற்கு மாறுபாடாக இருந்தால்?  வாழ்க்கை வாழ்வதன் பயன் கிட்ட வேண்டும் என்றால் லட்சியத்தோடு கூடிய வாழ்க்கை வாழ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories