December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

சுபாஷிதம்: திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்

108 ஞான முத்துக்கள்:

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

31. திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

ஸ்லோகம்:

கன்யா வரயதே ரூபம் மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |
பாந்தவா: குலமிச்சந்தி ம்ருஷ்டான்னமிதரே ஜனா:||

பொருள்: 

மணப்பெண் மணமகனின் அழகைப் பார்ப்பாள். தாய் மணமகனின் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பாள். தந்தை மணமகனின் கல்வி, நடத்தை போன்றவற்றை கவனிப்பார். குடும்பத்தினர் வம்ச பரம்பரை குறித்து ஆலோசிப்பர். பிற விருந்தினர்கள் கல்யாண விருந்தின் மேல் கவனம் செலுத்துவர்.

விளக்கம்:

திருமணம் என்பது வெறும் இரு மனிதர்களின் பந்தம் அல்ல. இரு குடும்பங்களின் இடையே ஏற்படும் அனுபந்தம். தாய், தந்தை, உற்றார், நண்பர்கள் இவ்விதம் பலரும் திருமணம் குறித்து ஆர்வம் காட்டுவர். இது புது மணத் தம்பதிகளுக்கு பக்கபலமாக அமையும். திருமணத்தில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் அழகைப் பார்ப்பதோடு அறிவு குணம் பழக்கவழக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றின் மீதும் ஆர்வம் கொள்வர். உற்றார் உறவினர் மணமகனின் குடும்பத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வர். நண்பர்களும் விருந்தினர்களும் விருந்துண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்வர்.

திருமணம் நன்றாக நடந்தது என்றால் சாப்பாடு நன்றாக இருந்தது என்று பொருள். இவ்விதம் திருமண விஷயத்தில் உறவினர்களும் நண்பர்களும் சமூகமும் சேர்ந்து ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது இவை அனைத்தையும் மறந்து வெறும் குருட்டுக் காதலில் விழுந்து அதன் பிறகு தலையெடுக்கும் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் விவாக உறவை மட்டுமின்றி வாழ்க்கையையே சின்னா பின்னம் செய்து கொள்கிறார்கள். தற்போது இவ்விதமான சம்பவங்கள் அதிகரிக்கும் காலமாக உள்ளது.

உலக மக்களின் பாராட்டைப் பெற்ற நம் தேசத்தின் திருமண அமைப்பு சாஸ்திரங்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அத்தகைய அமைப்புக்கு அபாயச் சங்கு ஒலிப்பது போல தோன்றுகிறது. தஸ்மாத் ஜாக்கிரதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories