சுபாஷிதம்: திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்

108 ஞான முத்துக்கள்:

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

31. திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

ஸ்லோகம்:

கன்யா வரயதே ரூபம் மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |
பாந்தவா: குலமிச்சந்தி ம்ருஷ்டான்னமிதரே ஜனா:||

பொருள்: 

மணப்பெண் மணமகனின் அழகைப் பார்ப்பாள். தாய் மணமகனின் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பாள். தந்தை மணமகனின் கல்வி, நடத்தை போன்றவற்றை கவனிப்பார். குடும்பத்தினர் வம்ச பரம்பரை குறித்து ஆலோசிப்பர். பிற விருந்தினர்கள் கல்யாண விருந்தின் மேல் கவனம் செலுத்துவர்.

விளக்கம்:

திருமணம் என்பது வெறும் இரு மனிதர்களின் பந்தம் அல்ல. இரு குடும்பங்களின் இடையே ஏற்படும் அனுபந்தம். தாய், தந்தை, உற்றார், நண்பர்கள் இவ்விதம் பலரும் திருமணம் குறித்து ஆர்வம் காட்டுவர். இது புது மணத் தம்பதிகளுக்கு பக்கபலமாக அமையும். திருமணத்தில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் அழகைப் பார்ப்பதோடு அறிவு குணம் பழக்கவழக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றின் மீதும் ஆர்வம் கொள்வர். உற்றார் உறவினர் மணமகனின் குடும்பத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வர். நண்பர்களும் விருந்தினர்களும் விருந்துண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்வர்.

திருமணம் நன்றாக நடந்தது என்றால் சாப்பாடு நன்றாக இருந்தது என்று பொருள். இவ்விதம் திருமண விஷயத்தில் உறவினர்களும் நண்பர்களும் சமூகமும் சேர்ந்து ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது இவை அனைத்தையும் மறந்து வெறும் குருட்டுக் காதலில் விழுந்து அதன் பிறகு தலையெடுக்கும் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் விவாக உறவை மட்டுமின்றி வாழ்க்கையையே சின்னா பின்னம் செய்து கொள்கிறார்கள். தற்போது இவ்விதமான சம்பவங்கள் அதிகரிக்கும் காலமாக உள்ளது.

உலக மக்களின் பாராட்டைப் பெற்ற நம் தேசத்தின் திருமண அமைப்பு சாஸ்திரங்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அத்தகைய அமைப்புக்கு அபாயச் சங்கு ஒலிப்பது போல தோன்றுகிறது. தஸ்மாத் ஜாக்கிரதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories