February 20, 2026, 3:01 PM
31.2 C
Chennai

சுபாஷிதம்: கல்வி அறிவு பெறும் வழிகள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

42. கல்வி அறிவு பெறும் வழிகள்!

செய்யுள்:

குரு சுஸ்ரூஷயா வித்யா புஷ்கலேன தனேன வா |
அதவா வித்யயா வித்யா சதுர்தீ நோ பலப்யதே ||

பொருள்:

குரு சேவை செய்வதன் மூலம் கிடைப்பது, தாராளமாக பணம் செலவழிப்பதன் மூலம் பெறுவது,  ஒரு கலையைக் கொடுத்து வேறொரு கலையைக் கற்றுக் கொள்வதால் பெறுவது என்று ஞானத்தைப் பெறும் மார்க்கங்கள், வழிமுறைகள் மூன்று. அவ்வாறு அன்றி வித்யையை கற்பதற்கு நான்காவது உபாயம் இல்லை.

விளக்கம்:

ஞானம் பெறுவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்கிறார் கவி.  இந்த மூன்று வழிகள் மூலம் ஜிஞ்ஞாசுகள் அறிவு பெறுகிறார்கள்.

வினயம், சமர்ப்பணம், பகிர்தல் என்ற மூன்றும் மாணவர் அறிவு பெறும் வழிகள். குருவைச் சரணடைந்து அவருக்குப் பணிவோடு சேவை புரிந்து அவரிடமிருந்து கல்வி அறிவைப் பெறுவது முதல் மார்க்கம். முன்பு பாரதிய குருகுலங்களில் இவ்விதம்தான் கல்வி பெறப்பட்டது. எப்போதுமே கல்வி அறிவு பெறுவதற்கு பணிவும் சிரத்தையும் தேவை என்பது இதன் தாத்பர்யம்.

இரண்டாவது மார்க்கம் பணம் செலவு செய்து கற்பது. முன்பு குருதட்சிணை சமர்ப்பிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், டொனேஷன் மட்டுமேயன்றி கல்வியறிவு பெறத் தேவையான நூல்கள் வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஒரு நல்ல சொற்பொழிவைக் கேட்க செல்ல வேண்டுமென்றாலும் ஒரு கல்விச் சுற்றுலா செல்ல வேண்டுமானாலும் செலவுக்கு பின்வாங்கக் கூடாது. அதனால் அர்பணிப்பு என்பது இரண்டாவது வழியாக கூறப்பட்டது.

மூன்றாவது பரஸ்பரம் பகிர்தல். புது விஷயங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளும் முறை. இது பத்து புத்தகங்களை படிப்பதற்குச் சமம். கல்வி, விஞ்ஞான கருத்தரங்குகள் நடக்கின்றன. அதில் பங்கு பெறுபவர்கள் தம் தம் அனுபவங்களை நேர்மையாக பகிர்ந்து கொள்ளும்போது அவற்றுக்கு பயன் கிடைக்கிறது. இது மூன்றாவது உபாயமாக கூறுகிறார் கவி. இவற்றைத் தவிர நான்காவது மார்க்கம் இல்லவே இல்லை என்று நிச்சயமாகக் கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories