December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

சுபாஷிதம்: கல்வி அறிவு பெறும் வழிகள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

42. கல்வி அறிவு பெறும் வழிகள்!

செய்யுள்:

குரு சுஸ்ரூஷயா வித்யா புஷ்கலேன தனேன வா |
அதவா வித்யயா வித்யா சதுர்தீ நோ பலப்யதே ||

பொருள்:

குரு சேவை செய்வதன் மூலம் கிடைப்பது, தாராளமாக பணம் செலவழிப்பதன் மூலம் பெறுவது,  ஒரு கலையைக் கொடுத்து வேறொரு கலையைக் கற்றுக் கொள்வதால் பெறுவது என்று ஞானத்தைப் பெறும் மார்க்கங்கள், வழிமுறைகள் மூன்று. அவ்வாறு அன்றி வித்யையை கற்பதற்கு நான்காவது உபாயம் இல்லை.

விளக்கம்:

ஞானம் பெறுவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்கிறார் கவி.  இந்த மூன்று வழிகள் மூலம் ஜிஞ்ஞாசுகள் அறிவு பெறுகிறார்கள்.

வினயம், சமர்ப்பணம், பகிர்தல் என்ற மூன்றும் மாணவர் அறிவு பெறும் வழிகள். குருவைச் சரணடைந்து அவருக்குப் பணிவோடு சேவை புரிந்து அவரிடமிருந்து கல்வி அறிவைப் பெறுவது முதல் மார்க்கம். முன்பு பாரதிய குருகுலங்களில் இவ்விதம்தான் கல்வி பெறப்பட்டது. எப்போதுமே கல்வி அறிவு பெறுவதற்கு பணிவும் சிரத்தையும் தேவை என்பது இதன் தாத்பர்யம்.

இரண்டாவது மார்க்கம் பணம் செலவு செய்து கற்பது. முன்பு குருதட்சிணை சமர்ப்பிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், டொனேஷன் மட்டுமேயன்றி கல்வியறிவு பெறத் தேவையான நூல்கள் வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஒரு நல்ல சொற்பொழிவைக் கேட்க செல்ல வேண்டுமென்றாலும் ஒரு கல்விச் சுற்றுலா செல்ல வேண்டுமானாலும் செலவுக்கு பின்வாங்கக் கூடாது. அதனால் அர்பணிப்பு என்பது இரண்டாவது வழியாக கூறப்பட்டது.

மூன்றாவது பரஸ்பரம் பகிர்தல். புது விஷயங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளும் முறை. இது பத்து புத்தகங்களை படிப்பதற்குச் சமம். கல்வி, விஞ்ஞான கருத்தரங்குகள் நடக்கின்றன. அதில் பங்கு பெறுபவர்கள் தம் தம் அனுபவங்களை நேர்மையாக பகிர்ந்து கொள்ளும்போது அவற்றுக்கு பயன் கிடைக்கிறது. இது மூன்றாவது உபாயமாக கூறுகிறார் கவி. இவற்றைத் தவிர நான்காவது மார்க்கம் இல்லவே இல்லை என்று நிச்சயமாகக் கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories