சுபாஷிதம்: நிலையான மனம்!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

55. நிலையான மனம்

செய்யுள்:

து: கேஷ்வனுத்விக்னமனா: சுகேஷு விகதஸ்ப்ருஹ: |
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முனிருச்யதே ||

— பகவத்கீதை (2-56) 

பொருள்:

துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறான்.

விளக்கம்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவத்கீதையில் பகவான் அளித்த உபதேசங்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.

நிலையான மனம் உடையவர் யார் என்று விளக்கும் ஸ்லோகம் இது. தற்காலிகமான இன்பம் துன்பம்  இரண்டிடமும் ஒன்றே போல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

தேர்வில் தோற்றுவிட்டாலோ, எதிர்பாராத ராங்க் வரவில்லை என்றோ அவசரப்பட்டு கணநேர ஆவேசத்தில் உயிரைவிடத் துணியும் இளைய சமுதாயத்துக்கு இந்த ஸ்லோகம் ஒரு அமிர்தத் துளி.

துன்பம் அச்சத்தை அளித்தாலும், இன்பம் சுகத்தை அளித்தாலும், உலகியலான காதல், பயம், எரிச்சல் போன்றவற்றில் இருந்து மீள முடியாமல் போனாலும், அந்த மனிதன் தன் வாழ்வின் லட்சியத்தை அடைவதில் பின்தங்கி விடுவான்.

இயற்கை கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு பலியாகாமல் தன் கடமையை நிறைவேற்றி முன்னோக்கிச் செல்லும் நிலைத்த மனது மனிதனுக்கு மிக அவசியம். அப்போதுதான் சரியாக யோசிக்கும் உறுதி ஏற்படும். தான் நல்ல மார்க்கத்தில் நடப்பதோடு தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கூட சரியான வழி காட்ட முடியும்.

தலைமைப் பண்புகளில் முதன்மையானது இந்த தீர குணமே. எவ்விதமான பாரபட்சமும் இன்றி, அவசர முடிவு எடுக்காமல், ஆட்சி நடத்துவதற்கு இந்த உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும். தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கு ஆரம்பப்படியான இந்த குணங்களை பழகிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories