சுபாஷிதம்: நிலையான மனம்!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

55. நிலையான மனம்

செய்யுள்:

து: கேஷ்வனுத்விக்னமனா: சுகேஷு விகதஸ்ப்ருஹ: |
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முனிருச்யதே ||

— பகவத்கீதை (2-56) 

பொருள்:

துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறான்.

விளக்கம்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவத்கீதையில் பகவான் அளித்த உபதேசங்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.

நிலையான மனம் உடையவர் யார் என்று விளக்கும் ஸ்லோகம் இது. தற்காலிகமான இன்பம் துன்பம்  இரண்டிடமும் ஒன்றே போல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

தேர்வில் தோற்றுவிட்டாலோ, எதிர்பாராத ராங்க் வரவில்லை என்றோ அவசரப்பட்டு கணநேர ஆவேசத்தில் உயிரைவிடத் துணியும் இளைய சமுதாயத்துக்கு இந்த ஸ்லோகம் ஒரு அமிர்தத் துளி.

துன்பம் அச்சத்தை அளித்தாலும், இன்பம் சுகத்தை அளித்தாலும், உலகியலான காதல், பயம், எரிச்சல் போன்றவற்றில் இருந்து மீள முடியாமல் போனாலும், அந்த மனிதன் தன் வாழ்வின் லட்சியத்தை அடைவதில் பின்தங்கி விடுவான்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இயற்கை கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு பலியாகாமல் தன் கடமையை நிறைவேற்றி முன்னோக்கிச் செல்லும் நிலைத்த மனது மனிதனுக்கு மிக அவசியம். அப்போதுதான் சரியாக யோசிக்கும் உறுதி ஏற்படும். தான் நல்ல மார்க்கத்தில் நடப்பதோடு தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கூட சரியான வழி காட்ட முடியும்.

தலைமைப் பண்புகளில் முதன்மையானது இந்த தீர குணமே. எவ்விதமான பாரபட்சமும் இன்றி, அவசர முடிவு எடுக்காமல், ஆட்சி நடத்துவதற்கு இந்த உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும். தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கு ஆரம்பப்படியான இந்த குணங்களை பழகிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories