சுபாஷிதம்: நிலையான மனம்!

Published:

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

55. நிலையான மனம்

செய்யுள்:

து: கேஷ்வனுத்விக்னமனா: சுகேஷு விகதஸ்ப்ருஹ: |
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முனிருச்யதே ||

— பகவத்கீதை (2-56) 

பொருள்:

துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறான்.

விளக்கம்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவத்கீதையில் பகவான் அளித்த உபதேசங்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.

நிலையான மனம் உடையவர் யார் என்று விளக்கும் ஸ்லோகம் இது. தற்காலிகமான இன்பம் துன்பம்  இரண்டிடமும் ஒன்றே போல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

தேர்வில் தோற்றுவிட்டாலோ, எதிர்பாராத ராங்க் வரவில்லை என்றோ அவசரப்பட்டு கணநேர ஆவேசத்தில் உயிரைவிடத் துணியும் இளைய சமுதாயத்துக்கு இந்த ஸ்லோகம் ஒரு அமிர்தத் துளி.

துன்பம் அச்சத்தை அளித்தாலும், இன்பம் சுகத்தை அளித்தாலும், உலகியலான காதல், பயம், எரிச்சல் போன்றவற்றில் இருந்து மீள முடியாமல் போனாலும், அந்த மனிதன் தன் வாழ்வின் லட்சியத்தை அடைவதில் பின்தங்கி விடுவான்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இயற்கை கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு பலியாகாமல் தன் கடமையை நிறைவேற்றி முன்னோக்கிச் செல்லும் நிலைத்த மனது மனிதனுக்கு மிக அவசியம். அப்போதுதான் சரியாக யோசிக்கும் உறுதி ஏற்படும். தான் நல்ல மார்க்கத்தில் நடப்பதோடு தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கூட சரியான வழி காட்ட முடியும்.

தலைமைப் பண்புகளில் முதன்மையானது இந்த தீர குணமே. எவ்விதமான பாரபட்சமும் இன்றி, அவசர முடிவு எடுக்காமல், ஆட்சி நடத்துவதற்கு இந்த உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும். தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கு ஆரம்பப்படியான இந்த குணங்களை பழகிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img