சுபாஷிதம்: தென்னை மரம் கூறும் பாடம்!

Published:

subhashitam-3
subhashitam-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

60. தென்னை மரம் கூறும் பாடம்!

சுலோகம்:

ப்ரதமவயசி பீதம் தோயமல்பம் ஸ்மரந்த:
சிரசி நிஹிதபாரா நாரிகேலா நராணாம் |
சலிலமம்ருதகல்பம் தத்யுராஜீவிதாந்தம் 
ந ஹி க்ருதமுபகாரம் சாதவோ விஸ்மரந்தி ||

பொருள்:

செடியாக இருக்கும்போது நாம் ஊற்றும் நீரைக் குடித்து தென்னை மரம் வளர்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தன் வாழ்நாள் முழுவதும் தலைமீது தேங்காய்களின் பாரத்தை சுமந்து அமுதம் போன்ற இளநீரை நமக்கு அளிக்கிறது. நல்லவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள்.

விளக்கம்:

இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் பல உள்ளன. நன்றியறிதல் என்ற உயர்ந்த குணத்தை தென்னை மரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கும் ஸ்லோகம் இது.

சிறுவயதிலிருந்து நம்மை பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பெற்றோருக்கும், நாம் வளர்ந்து ஆளாவதற்கு உதவிய சமுதாயத்திற்கும் நன்றி காட்டுவது நல்லவர்களின் இயல்பு. தென்னை மரத்தைப் பார்க்கும் போது இந்த நன்றி காட்டும் குணம் நினைவுக்கு வரவேண்டும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img