சுபாஷிதம்: சந்தன மரம் போன்ற சான்றோர்!

subhashitam-6
subhashitam-6

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

70. சந்தன மரம் போன்ற சான்றோர்!

ஸ்லோகம்:

மூலம் புஜங்கை: சிகரம் விஹங்கை:
சாகா ப்லவங்கை: குசுமானி ப்ருங்கை: |
சம்சேவ்யதே சந்தனபாதபோ௨யம்
பரோபகாயாய சதாம் ப்ரவ்ருத்தி: ||
– சாரங்கதரர்

பொருள்:

சந்தன மரத்தின் அடியில் பாம்புகள் வசிக்கும். மரத்தின் மேல் பறவைகள் வசிக்கும். கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம்  சான்றோரின் இயல்பு.

விளக்கம்:

மகனீயர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளிப்பர். பரமசிவன் கழுத்தில் அணிந்த பாம்புகள் போல யாருமே அருகில் சேர்த்துக் கொள்ளாது துரத்தி விடுபவர்களைக் கூட மகனீயர்கள் ஆதரவளித்து வருத்தம் களைவர். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை, மரங்களிலெல்லாம் மதிப்பு வாய்ந்ததும் சுகந்த பரிமளம் வீசுவதுமான சந்தன மரத்தோடு ஒப்பிட்டு கவி அளித்துள்ள ஸ்லோகம் இது.

ஒவ்வொரு மனிதனும் யாரையும் புறக்கணிக்காமல் அனைவரையும் தன் உள்ளத்திற்குள் வரவேற்கவேண்டும். அடிக்கடி வந்து மகரந்தம் எடுத்துச் செல்லும் வண்ணத்துப் பூச்சிகள், மரத்தை உலுக்கி கிளைக்குக் கிளை தாவும் குரங்குகள், பழங்களைத் தின்று சலசலப்பை ஏற்படுத்தும் பறவைகள், அடிமரத்தை அண்டி வந்து அலையும் பாம்புகள்… இவ்விதம் அனைத்தையும் அருகில் சேர்த்துக்கொள்ளும் சந்தன மரத்தை மகாத்மாக்களோடு ஒப்பிடும் சுபாஷிதம் இது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தன், பிற என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அடைக்கலம் அளிப்பது நன் மக்களின்  இயல்பு.

சமுதாயத்தில் பல்வேறுபட்ட மனிதர்கள் இருப்பார்கள். செல்வர், ஏழை, ஊனமுற்றோர், பலவீனமானவர்… அனைவருக்கும் கௌரவமாக வாழும் உரிமை உண்டு. 

சமுதாயம் அல்லது  தேசம், சந்தன விருட்சத்தைப் போல் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்க வேண்டும். யாரையும் இழிவாக பார்க்கக்கூடாது. உயர்வாகவும் பார்க்கக்கூடாது. அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற செய்தியை இந்த ஸ்லோகத்தில் இருந்து அறியலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories