சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

74. நான்கு வித அனர்த்தங்கள்! 

ஸ்லோகம்:

யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகிதா |ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் ||
– ஹிதோபதேசம் 1-11

பொருள்:

இளமைப் பருவத்தில் வயது, (தேவைக்கதிகமான) செல்வம், அதிகாரம், விவேகமின்மை இவை ஒவ்வொன்றும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட நான்கும் சேர்ந்து இருந்தால் எத்தகைய ஆபத்து?

விளக்கம்: 

அனர்த்தம், அகம்பாவம் இரண்டிற்கும் விவேகமின்மை துணை போனால்…? கவனம்…! என்று எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம். 

இளமைப் பருவம் என்பது கற்பனையான பொய் உலகில் சஞ்சரிக்கும் காலம். எவரையும் பொருட்படுத்தாத மனநிலை.  இந்த வயதில் கவனமாக இருக்கவேண்டும்  என்கிறார்  ஆச்சாரியார். 

கர்வம் தலைவிரித்தாடும் பருவம் அது. முதுமையில் வரும் அமைதி ஒரு அமைதியா என்ன? புலன்கள் அடங்கியபின் மனிதனும் அடங்கித்தான் போவான்.  அதனால் இளமைப் பருவத்தை முதல் அனர்த்தமாகக் கூறுகிறார். 

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இரண்டாவது அனர்த்தம்,  செல்வம். இளமைச் செருக்கோடு  அளவுக்கதிகமான செல்வமும் சேர்ந்து கொண்டால்…?  இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்தை அனுபவிப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்.  கெட்ட பழக்கங்கள் இருக்கும் இடத்திலும் நெறிமுறையற்ற இடங்களிலும் கூடாநட்பு வந்து குவியும் வாய்ப்புள்ளது. கர்வம் பெருகித் தலைவிரித்தாடும்.  நல்லவர்களை அவமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டிய வயது அது.

மூன்றாவது, பதவி,  அதிகாரம். இந்தப் பகட்டினால் கர்வம் கண்ணை மறைக்கும். சொந்த மனிதர்களே பகைவராகத் தெரிவர். புதிய நட்புகள் பழக்கமாகும். முட்டாளின் கையில் இருக்கும் கத்தி போல அவனுக்கும்  உடனிருப்பவருக்கும் கூட அனர்த்தம் விளைவிக்கும்  என்று எச்சரிக்கிறார். 

நான்காவது  விவேகமின்மை. நன்மை எது? தீமை எது? என்று எதையும் புரிந்து கொள்ள இயலாத நிலை. நன்மை பயக்கும் சொற்கள் தலையில் ஏறாது. மிகப் பெரும் நஷ்டம் ஏற்படுத்திய விவேகமின்மைக்கு துரியோதனனை விட பெரிய உதாரணம் யார் இருக்கமுடியும்? 

இவ்விதமாக இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

உயர் பதவியிலிருக்கும் தலைவர்களின் புதல்வர்கள் இளமை, செல்வம், அதிகாரம் இவற்றின் கர்வத்தால் செய்த விவேகமற்ற செயல்கள் வரலாற்றில் நிலைத்து விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories