February 20, 2026, 9:30 AM
25.9 C
Chennai

சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

74. நான்கு வித அனர்த்தங்கள்! 

ஸ்லோகம்:

யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகிதா |ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் ||
– ஹிதோபதேசம் 1-11

பொருள்:

இளமைப் பருவத்தில் வயது, (தேவைக்கதிகமான) செல்வம், அதிகாரம், விவேகமின்மை இவை ஒவ்வொன்றும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட நான்கும் சேர்ந்து இருந்தால் எத்தகைய ஆபத்து?

விளக்கம்: 

அனர்த்தம், அகம்பாவம் இரண்டிற்கும் விவேகமின்மை துணை போனால்…? கவனம்…! என்று எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம். 

இளமைப் பருவம் என்பது கற்பனையான பொய் உலகில் சஞ்சரிக்கும் காலம். எவரையும் பொருட்படுத்தாத மனநிலை.  இந்த வயதில் கவனமாக இருக்கவேண்டும்  என்கிறார்  ஆச்சாரியார். 

கர்வம் தலைவிரித்தாடும் பருவம் அது. முதுமையில் வரும் அமைதி ஒரு அமைதியா என்ன? புலன்கள் அடங்கியபின் மனிதனும் அடங்கித்தான் போவான்.  அதனால் இளமைப் பருவத்தை முதல் அனர்த்தமாகக் கூறுகிறார். 

இரண்டாவது அனர்த்தம்,  செல்வம். இளமைச் செருக்கோடு  அளவுக்கதிகமான செல்வமும் சேர்ந்து கொண்டால்…?  இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்தை அனுபவிப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்.  கெட்ட பழக்கங்கள் இருக்கும் இடத்திலும் நெறிமுறையற்ற இடங்களிலும் கூடாநட்பு வந்து குவியும் வாய்ப்புள்ளது. கர்வம் பெருகித் தலைவிரித்தாடும்.  நல்லவர்களை அவமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டிய வயது அது.

மூன்றாவது, பதவி,  அதிகாரம். இந்தப் பகட்டினால் கர்வம் கண்ணை மறைக்கும். சொந்த மனிதர்களே பகைவராகத் தெரிவர். புதிய நட்புகள் பழக்கமாகும். முட்டாளின் கையில் இருக்கும் கத்தி போல அவனுக்கும்  உடனிருப்பவருக்கும் கூட அனர்த்தம் விளைவிக்கும்  என்று எச்சரிக்கிறார். 

நான்காவது  விவேகமின்மை. நன்மை எது? தீமை எது? என்று எதையும் புரிந்து கொள்ள இயலாத நிலை. நன்மை பயக்கும் சொற்கள் தலையில் ஏறாது. மிகப் பெரும் நஷ்டம் ஏற்படுத்திய விவேகமின்மைக்கு துரியோதனனை விட பெரிய உதாரணம் யார் இருக்கமுடியும்? 

இவ்விதமாக இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.

உயர் பதவியிலிருக்கும் தலைவர்களின் புதல்வர்கள் இளமை, செல்வம், அதிகாரம் இவற்றின் கர்வத்தால் செய்த விவேகமற்ற செயல்கள் வரலாற்றில் நிலைத்து விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories