சுபாஷிதம்: புல்லைத் தின்னாது புலி!

Published:

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

84. புல்லைத் தின்னாது! 

ஸ்லோகம்:

வனே௨பி சிம்ஹா ம்ருகமாம்சபக்ஷிணோ
புபுக்ஷிதா நைவ த்ருணம் சரந்தி !
ஏவம் குலீனா வ்யசனாபிபூதா
ந நீசகர்மாணி சமாசரந்தி !!

பொருள்:

வனத்தில் வசிக்கும் சிங்கம் மான்களை வேட்டையாடி, தன் உணவை திருப்தியாகத் தின்கிறது. பசித்தாலும் புல்லை தின்னாது. அதேபோல் நல்ல பண்பாடு உள்ள குடும்பத்தில் பிறந்தவர் மிகுந்த நெருக்கடியில் இருந்தாலும், வாய்ப்பிருந்தாலும், சிரமத்தில் இருந்தாலும் பண்பாடற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

விளக்கம்:

தேவை, வாய்ப்பு இரண்டும் இருந்தாலும் உயர்ந்தோர் நேர்மையான நெறிமுறைகளை மீற மாட்டார்கள் என்ற கருத்தைக் கூறும் சுபாஷிதம் இது.

லஞ்சம் வாங்கும் சிலர் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டதால் லஞ்சம் வாங்கும்படி ஆயிற்று என்பார்கள். எல்லோரும்தான் வாங்குகிறார்கள் என்றும் வாய்ப்பு கிடைத்தால் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்றும் இப்படி பல சாக்குகள்…! நேர்மையான மனிதன் சூழ்நிலைக்கு அடிமையாக மாட்டான்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அநீதி இழைத்த ஒரு அரசியல் தலைவருக்கு பெயில் கொடுக்க மறுத்து அவர்கள் அளித்த லஞ்சத்தையும் வாங்க மறுத்த ஒரு நீதிபதி இதற்கு உதாரணம். 

மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பல கஷ்டங்களை அனுபவித்த போதும் உண்மை பிறழாத ராஜா ஹரிச்சந்திரன் நமக்கு ஆதர்சம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img