December 5, 2025, 2:50 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: கல்வி, செல்வம், வீரம்!

subhashitam 1 3 - 2025
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

86. கல்வி, செல்வம், வீரம்!

ஸ்லோகம்:

வித்யா விவாதாய தனம் மதாய சக்தி: பரேஷாம் பரபீடனாய |கலஸ்ய சாதோர்விபரீதமேதத் ஞானாய தானாய ச ரக்ஷணாய||
– பர்த்ருஹரி

பொருள்:

தீயவன் கல்வியறிவை விவாதம் செய்வதற்கு பயன்படுத்துவான். அவனுடைய செல்வம் கர்வம்  கொள்வதற்குக் காரணமாகும். அவனுடைய வலிமை பிறரைத் துன்புறுத்துவதற்குப் பயன்படும். நல்லவர்களிடம் இந்த மூன்றும் உலக நன்மைக்கே பயன்படும். அவருக்கு கல்வியறிவால் ஞானம் கிடைக்கும். செல்வத்தால் தானம் செய்யும் குணம் அதிகரிக்கும். நல்லவர்களின் வலிமை சமுதாயத்தின் பாதுகாப்புக்குப் பயன்படும். 

விளக்கம்: 

இயல்பாகவே தீயவர் பிறருக்குத் தீமை விளைவிப்பார்கள். நல்லவர் பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவே தன் சக்திகளைப் பயன்படுத்துவார். கல்வி, செல்வம், உடல் வலிமை இம்மூன்றையும் இருவரும் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை விளக்கும் சுலோகம் இது.

கிடைத்த சக்திகளை சமுதாய நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை இந்த ஸ்லோகம் மூலம் கவி  நமக்கு அளிக்கிறார். இம்மூன்றையும் தவறாக பயன்படுத்துபவருக்கு கூறப்படும் போதனை இது.

தீயோர் அதிகாரத்தாலும் செல்வத்தாலும் வன்முறையாலும் சமுதாயத்தை அடக்கியாளப் பார்ப்பார்கள். அதனால்தான் சாஸ்திரக் கல்வியை அருகதையற்றவர்களுக்கு கற்றுத் தரக் கூடாது என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் கையிலிருக்கும் ஆயுதம் பாதுகாப்புக்கும் திருடன் கையிலிருக்கும் ஆயுதம் வன்முறைக்கும் பயன்படுகிறது அல்லவா?

தன் விதண்டாவாதத்தால், விபரீத வியாக்கியானத்தால் இளைஞர்களை தவறான வழிக்குத் திருப்பும் போலி மேதாவிகள் பல்கலைக்கழகங்களை மாசு படுத்துகிறார்கள். அதிகாரத்தை கையில் கொண்டு தேசத்துரோக சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து ஜனநாயகத்தை ஏளனம் செய்கிறார்கள். இவர்களை மறுத்து கல்வி செல்வம் வலிமை மூன்றையும் உலக நன்மைக்கு பயன்படுத்துவோரை பாராட்டுகிறது இந்த ஸ்லோகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories