உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”

‘உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்’ இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது”
 
(“கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை’ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?)
 
–(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை)17eb84b3af187198933edebabedbcf5f radio stations guru 1 - 2026
 
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
ஒரு ஜோசியர், பெரியவாளை தரிசனம் செய்து கொண்டார்.
 
“பெரிய குடும்பம்,வருமானம் போறல்லே,ஜோசியம் சொல்றதிலே வரும்படி குறைவு.ரொம்ப கஷ்டம்” என்று முறையிட்டார்.
 
பெரியவா கேட்டார்கள்; “நீ உங்கப்பா இருந்த பூர்வீக வீட்டில்தானே இருக்கே?”
 
“இல்லே.அதில் என் அண்ணா இருக்கார். அதற்கு மேற்குப் பக்கம் ஒரு வீட்டில் குடியிருக்கேன்”.
 
“நீ அங்கே இருக்க வேண்டாம்.பூர்வீக கிருஹத்துக்குக் கிழக்கே,பழைய மாட்டுக் கொட்டகை இருக்கோன்னோ? அந்த இடத்திலே ஒரு குடிசை போட்டுண்டு குடியிரு”.
 
(அவர்கள் பரம்பரையாக அம்பாளைப் பூஜை செய்த குடும்பமாம். அதனால் பசு மாட்டுக் கொட்டகையில்
இருக்கச் சொன்னார்)
 
பெரியவாள் மேலும் சொல்கிறார்;
 
“எல்லாக் கிரகங்களையும் நன்னாத் திட்டறயோன்னோ, ‘உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்’ இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது.
 
“குரு என்பது பெரிய கிரகம்.தட்சிணாமூர்த்தி ஸ்வரூபம் அவரைப் போய் நீசன்,பாபி,வக்ரம் என்றெல்லாம் திட்டக்கூடாது.சனி என்பவர் சூரியனின் புத்திரன் ஈஸ்வர பட்டம் பெற்றவர் .அவரைப் போய் பாபி என்கிறே.
 
“கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை’ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?
 
“பெண் பிள்ளை ஜாதகப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம். ‘பொருத்தமில்லை’ என்று
நிர்த்தாட்சண்யமாகச் சொல்ல வேண்டாமே… பெண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும்; பையனுக்குப் புத்திர பாக்கியம் போன்றவை கேள்விக்குறி’ என்கிற மாதிரி சொல்லி விடலாம்.
 
” முப்பது வயதாகியும் பல பெண்கள் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு வரன் ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தால் கூடியவரை நிராகரிக்காமல் பதில் சொல்லணும்….”
 
(கல்யாண விஷயத்தில் ஆண் – பெண் ஜாதகப் பொருத்தத்துக்குப் பெரியவாள் அதிக மதிப்பு கொடுப்பதில்லை.குலம்,கோத்திரம் பார்த்து மனப் பொருத்தம் இருந்தால் போதும். பழங்காலத்தில்
ஜாதகப் பொருத்த விஷயம் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை என்பார்கள்.)
 
ஜோசியருக்கு ரொம்ப திருப்தி.
 
“இனிமே பெரியவா சொன்னபடியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories