“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’- இதுக்கு என்ன அர்த்தம்? -பெரியவா

“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’-

இதுக்கு என்ன அர்த்தம்? =பெரியவா

(சரியாக விளக்கம் சொல்லாத பண்டிதர்களுக்கு பெரியவாளே சொன்ன அற்புத விளக்கம்)

.
.

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்

………………….ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,

பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த  சமயத்தில், நாலைந்து வித்வான்கள் -தரிசனத்துக்காக வந்தவர்கள் – உட்கார்ந்திருந்தார்கள்.

பேச்சு வாக்கில், “பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால்  நான், ‘நாராயண,நாராயண’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய” என்று சொல்லுகிறோம். அதுதான் வழக்கம்.

“அதற்கு என்ன அர்த்தம்?”

“நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு – என்று அர்த்தம்.”

அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச் சொன்னார்கள்.

பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ” நீங்கள் அத்தனை பேரும் சொன்னது தவறான அர்த்தம்” என்றார்கள்.

பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும் படே,படே வித்வான்கள்,’சிரோமணி’ பெற்றவர்கள்.

“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’ என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்கு, ஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப் பொருள் சொல்லி விட  முடியும்.அவ்வளவு எளிமையான சொற்கள்! ‘தவறு’ என்கிறார்களே, பெரியவா?

“நானே சொல்லிவிடட்டுமா?”

பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

“இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர் ஆயுஷ்மான் .பதினோரு கரணங்களில். பவ   என்று ஒரு கரணம். வார நாட்களில் சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது. இந்த மூன்றும்- புதன்கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு.

…வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா. .அதனாலே, இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்குமோ  , அதெல்லாம் உனக்குக் கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்….”

வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த

‘”தீர்காயுஷ்மந் பவ சௌம்ய’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories