February 21, 2026, 7:14 PM
29 C
Chennai

இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு!

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”

(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)…பெரியவா.

(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கர்நாடகம் – மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருந்தோம். ராமதுர்க என்ற ஊரின் அருகில்,வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியில் ஆனந்தமாக நீராடினோம். பெரியவாள் நதிக்கரையில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு ஜப-அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார்கள்.

அனுஷ்டானம் முடிந்து எழுந்திருந்ததும், தன் அருகிலிருந்த இரண்டு சிஷ்யர்களைக் கூப்பிட்டு, “உங்கள் மேல்துண்டுகளை கீழே போடுங்கள்” என்றார்கள்.

மிகவும் புதுமையான உத்திரவு!

ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு.

பெரியவா, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரு சிறுவன் காணப்பட்டான். ஏழெட்டு வயது இருக்கும். பெரியவா அவனை அருகில் அழைத்தார்கள்.

அந்த நதி, மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக் கொண்டிருந்தது, இருகரைகளையும் தொட்டுக்கொண்டு, அசாத்திய வெள்ளம். சுழித்து சுழித்திக் கொண்டு படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரியவா, அந்தச் சிறுவனிடம் கன்னடத்தில் சொன்னார்கள்;

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)

அந்தச் சிறுவன், இரண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்று,கழுத்தை மட்டும் வெளியே வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தான்.

அந்தப் பெண்,அரைமணிக்கு மேலாகவே உடல் முழுவதையும் தண்ணீரில் மறைத்துக்கொண்டு, ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.!

ஆமாம், வெள்ள வேகத்தில்,கட்டியிருந்த ஆடைகள் போயே போய்விட்டன. வெட்கம். எப்படி வெளியே வருவது” எப்படி வீட்டுக்குப் போவது? படிப்பறியா மக்கள்தான் என்றாலும் பண்பாடு மறக்கவில்லையே?

‘இந்த சனங்களெல்லாம் எப்பத்தான் போய்த் தொலைவாங்களோ?’ என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளைப் பார்த்து அந்தப் பெண் நொந்து போயிருக்கக் கூடும்.

ஆனால், யாத்திரைக் குழுவினரின் பார்வை, நூறு அடிக்கு அப்பால் செல்லவில்லை; செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.’

இந்த இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தொலை நோக்கு (அல்லது, தலை நோக்குப்) பார்வை என்பது இது தானோ?

அரண்மனைவாசியான திரௌபதி, கண்ணனைக் கேட்டு பெற்றாள் ஆடை. இந்தக் கிராமவாசிக்கு மகாசுவாமிகள் தானே வழங்கினார் ஆடை.

அந்தப் பெண்,மேல்துண்டுகளை உடம்பில் சுற்றிக்கொண்டு அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.

யாத்திரை கோஷ்டி நதி ஓரமாகவே கிழக்கு நோக்கி நகர்ந்தது.

ஆற்றில், வெள்ளம் இன்னும் வடியவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories