December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு!

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”

(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)…பெரியவா.

(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கர்நாடகம் – மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருந்தோம். ராமதுர்க என்ற ஊரின் அருகில்,வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியில் ஆனந்தமாக நீராடினோம். பெரியவாள் நதிக்கரையில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு ஜப-அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார்கள்.

அனுஷ்டானம் முடிந்து எழுந்திருந்ததும், தன் அருகிலிருந்த இரண்டு சிஷ்யர்களைக் கூப்பிட்டு, “உங்கள் மேல்துண்டுகளை கீழே போடுங்கள்” என்றார்கள்.

மிகவும் புதுமையான உத்திரவு!

ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு.

பெரியவா, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரு சிறுவன் காணப்பட்டான். ஏழெட்டு வயது இருக்கும். பெரியவா அவனை அருகில் அழைத்தார்கள்.

அந்த நதி, மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக் கொண்டிருந்தது, இருகரைகளையும் தொட்டுக்கொண்டு, அசாத்திய வெள்ளம். சுழித்து சுழித்திக் கொண்டு படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரியவா, அந்தச் சிறுவனிடம் கன்னடத்தில் சொன்னார்கள்;

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)

அந்தச் சிறுவன், இரண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்று,கழுத்தை மட்டும் வெளியே வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தான்.

அந்தப் பெண்,அரைமணிக்கு மேலாகவே உடல் முழுவதையும் தண்ணீரில் மறைத்துக்கொண்டு, ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.!

ஆமாம், வெள்ள வேகத்தில்,கட்டியிருந்த ஆடைகள் போயே போய்விட்டன. வெட்கம். எப்படி வெளியே வருவது” எப்படி வீட்டுக்குப் போவது? படிப்பறியா மக்கள்தான் என்றாலும் பண்பாடு மறக்கவில்லையே?

‘இந்த சனங்களெல்லாம் எப்பத்தான் போய்த் தொலைவாங்களோ?’ என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளைப் பார்த்து அந்தப் பெண் நொந்து போயிருக்கக் கூடும்.

ஆனால், யாத்திரைக் குழுவினரின் பார்வை, நூறு அடிக்கு அப்பால் செல்லவில்லை; செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.’

இந்த இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தொலை நோக்கு (அல்லது, தலை நோக்குப்) பார்வை என்பது இது தானோ?

அரண்மனைவாசியான திரௌபதி, கண்ணனைக் கேட்டு பெற்றாள் ஆடை. இந்தக் கிராமவாசிக்கு மகாசுவாமிகள் தானே வழங்கினார் ஆடை.

அந்தப் பெண்,மேல்துண்டுகளை உடம்பில் சுற்றிக்கொண்டு அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.

யாத்திரை கோஷ்டி நதி ஓரமாகவே கிழக்கு நோக்கி நகர்ந்தது.

ஆற்றில், வெள்ளம் இன்னும் வடியவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories