December 7, 2025, 2:11 AM
25.6 C
Chennai

வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!

srirangam vaikunta ekadasi utsav3 - 2025

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில், இராப்பத்து பத்து ஒன்றாம் திருநாளான இன்று (6.1.2020), நம்பெருமாள் விருச்சிக லக்கினத்தில் புறப்பாடாகி, பரமபத வாசலை கடந்து திருகொட்டகையில் பிரவேசம் கண்டருளினார்.

srirangam vaikunta ekadasi utsav - 2025

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

srirangam vaikunta ekadasi utsav1 - 2025

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ஆம் தேதி முதல் பகல்பத்து உத்ஸவம் நடைபெற்று வந்தது. திருமொழித் திருநாள் நிறைவு நாள் அன்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இன்று வைகுண்ட ஏகாதசி தொடங்கி திருவாய்மொழித் திருநாள் உத்ஸவம் நடைபெறுகிறது.

srirangam vaikunta ekadasi utsav2 - 2025

பகல்பத்து உத்ஸவத்தின் கடைசிநாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் ஸேவை சாதித்தார். பின்னர் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை ஸேவை சாதித்தார். மாலை 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் கண்டருளினார்.

srirangam vaikunta ekadasi utsav3 - 2025

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது. இதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட ஆபரணங்கள் அணிந்து கருவறை உள்ளிருந்து புறப்பாடு கண்டருளினார் நம்பெருமாள்.

srirangam vaikunta ekadasi utsav4 - 2025

பின் இரண்டாம் பிராகாரம் வழியே நாழிகோட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிராகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்து காலை சரியாக 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷம் எழுப்பினர்.

srirangam vaikunta ekadasi utsav5 - 2025

பின்னர் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு நம்பெருமாள் எழுந்தருளினார்

srirangam vaikunta ekadasi utsav7 - 2025

அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்த பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

srirangam vaikunta ekadasi utsav6 - 2025

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.

srirangam vaikunta ekadasi utsav8 - 2025

பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு அரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

srirangam vaikunta ekadasi utsav10 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories