வைகுண்ட ஏகாதசி! ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவ ஆலயங்களில் பரமபதவாசல் திறப்பு!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

srirangam vaikunta ekadasi utsav3 - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில், இராப்பத்து பத்து ஒன்றாம் திருநாளான இன்று (6.1.2020), நம்பெருமாள் விருச்சிக லக்கினத்தில் புறப்பாடாகி, பரமபத வாசலை கடந்து திருகொட்டகையில் பிரவேசம் கண்டருளினார்.

srirangam vaikunta ekadasi utsav - 2026

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

srirangam vaikunta ekadasi utsav1 - 2026

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ஆம் தேதி முதல் பகல்பத்து உத்ஸவம் நடைபெற்று வந்தது. திருமொழித் திருநாள் நிறைவு நாள் அன்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இன்று வைகுண்ட ஏகாதசி தொடங்கி திருவாய்மொழித் திருநாள் உத்ஸவம் நடைபெறுகிறது.

srirangam vaikunta ekadasi utsav2 - 2026

பகல்பத்து உத்ஸவத்தின் கடைசிநாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் ஸேவை சாதித்தார். பின்னர் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை ஸேவை சாதித்தார். மாலை 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் கண்டருளினார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
srirangam vaikunta ekadasi utsav3 - 2026

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது. இதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட ஆபரணங்கள் அணிந்து கருவறை உள்ளிருந்து புறப்பாடு கண்டருளினார் நம்பெருமாள்.

srirangam vaikunta ekadasi utsav4 - 2026

பின் இரண்டாம் பிராகாரம் வழியே நாழிகோட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிராகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்து காலை சரியாக 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷம் எழுப்பினர்.

srirangam vaikunta ekadasi utsav5 - 2026

பின்னர் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு நம்பெருமாள் எழுந்தருளினார்

srirangam vaikunta ekadasi utsav7 - 2026

அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்த பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
srirangam vaikunta ekadasi utsav6 - 2026

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.

srirangam vaikunta ekadasi utsav8 - 2026

பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு அரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

srirangam vaikunta ekadasi utsav10 - 2026

Related articles

Recent articles

spot_img