அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Published:

arasavilli suryanarayana temple - 2026

சாயா, உஷா பத்மினி சமேத ஸ்ரீ சூரிய நாராயண சுவாமி தேவாலயம் ஆந்திர பிரதேசம் அரசவல்லியில் உள்ளது. பத்ம புராணத்தின்படி மக்களின் நலத்திற்காக காஸ்யப மகரிஷி இந்த ஆலயத்தில் விக்ரஹ பிரதிஷ்டை செய்தார் .

வரலாற்றுச் சான்றுகளின்படி அரசவல்லியில் ஸ்ரீசூரிய ஆலயத்தை கலிங்க அரச வம்சத்தினரான கிழக்கு கங்கராஜாக்களில் முக்கியமானவரான தேவேந்திர வர்மா 545ல் நிர்மாணித்தார்.

சகல பக்தர்களுக்கும் பாதுகாப்பையும் ஆயுள் ஆரோக்யத்தையும் அருளும் ஸ்ரீசூர்ய நாராயணர் ஆறு கரங்களோடும் அபய முத்திரையுடனும் காட்சி அளிக்கிறார்.

தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்களின் நெரிசலில் கோயில் திக்குமுக்காடிப் போயுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img