ஆசையும், கோபமும்.. படுத்தும் பாடு! கடந்திட இவ்வழியினை நாடு!

kobam - 2026

நாம் எல்லோரும் எப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருப்போம் ஒரு காரியம் செய்யாமல் யாரும் சும்மா இருப்பதில்லை.

பகவான் கீதையில் நஹி கச்சித் க்ஷண மபி ஜாது திஷ்ட்டத்யகர்மக்ருத் என்று சொன்னார் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பவன் உலகத்தில் கிடையாது

ஒரு பைத்தியக்காரன் கூட அவனுடைய பார்வையில் ஏதாவது செய்து கொண்டிருப்பான் அவன் என்னவோ பெரிய காரியம் செய்வதாக எண்ணிக் கொண்டிருப்பான் அவனைப் பைத்தியம் என்று நாம் கூறுவோம் ஆனால் அவன் சீரியஸாக காரியம் செய்து கொண்டிருப்பான்

அப்படி உலகத்தில் எல்லோரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள் எந்த காரியத்தை ஆரம்பிக்கும் போது நமது மனதில் எண்ணம் ஒன்று இருக்கும் அது இந்த காரியம் விக்கினமின்றி முடிய வேண்டும் என்ற எண்ணம் நடுவில் ஏதாவது ஒரு தடங்கல் வருமோ என்று நாம் அச்சப்படுவோம்

அதனால் நம் முன்னோர்கள் ச்ரேயா ஸிபஹு விக்னானி என்று சொன்னார்கள் ஸ்ரேயப் பதமான காரியங்களில் 10 பேருக்கு நல்லது உண்டாகக் கூடிய காரியங்களை ஆரம்பித்தால் விக்னங்கள் வருவது இயற்கை.

krishnar 1 - 2026

இது எதனால் என்றால் மனிதனுடைய எண்ணம் விசித்திரமாக இருக்கும் என்ன விசித்திரம் எல்லோரும் கூட தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்று ஆசை. இன்னொருத்தனுக்கு நல்ல பெயர் வரக் கூடாது என்றும் ஆசை. இப்படி இரண்டு ஆசைகள் மனிதனுக்கு.

தனக்கு நல்ல பேர் வர வேண்டும் ஆனால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அது நன்றாக நடக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் அதற்கு ஏதாவது முட்டுக்கட்டை போட்டு கொண்டே இருப்பான் ஏனென்றால் அவனுக்கு ஏதாவது நல்ல பெயர் வந்து விட்டால் என்ன செய்வது என்பதை அவனுடைய சுபாவமாக இருக்கும்.

இப்படி மற்றவருக்கும் தனக்கு நல்ல பெயர் வேண்டும் அடுத்தவனுக்கு கூடாது என்ற எண்ணம் இருக்கும்.

மனிதனுக்கு வாழ்க்கையில் ஆசைகள் ஒன்றுக்கு பின் ஒன்று உண்டாகி கொண்டே இருக்கும் ஒவ்வொரு ஆசையையும் நாம் நிறைவேற்றிக் கொண்டே இருப்போம்

bharathi theerthar - 2026

உடனே மற்றொரு ஆசை ஏற்படும் இந்த ஆசைகளைப் பற்றி முன்னோர்கள்
ந ஜாது காமானாமுபயோகேன சாம்யதி!
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ராவாபி வர்த்ததே!!

என்று சொன்னார்கள்

அதாவது ஆசையை நிறைவேற்றினால் அத்துடன் நிற்காது அது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் அக்கினியில் நெய் விட்டால் எப்படி எரியுமோ அதுபோல ஆகையால் ஆசைகளை நிறைவேற்றி அதை குறைக்க வேண்டும் என்பது சரி அல்ல அது உண்டாகாமல் செய்து கொள்வதுதான் சரி

அதைப்போல கோபம் மனிதனுக்கு விசேஷமான சத்துரு சின்ன சின்ன விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு இருப்பார்கள் அதனால் மிகவும் அனர்த்தங்கள் நிகழும் கோபத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது காம குரோதங்களை எப்படி நீக்குவது என்று கேட்டால் அதற்கு வைராக்கியமும் பொறுமையும் இருக்கவேண்டும்

விரக்தியினால் காமத்தையும் பொறுமையால் குரோதத்தையும் தடுக்கமுடியும் காம குரோதங்களை விட்டவனுக்கு தான் வாழ்க்கையில் உண்மையான சுகம் இருக்கும் அவன்தான் சரியான மனிதன் இந்த நிலைமை அடைவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.

சக்னோதிஹைவ ய: ஸோதும் ப்ராக் சரீர விமோசணாத்!
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:

அதனால் ஆசையையும் கோபத்தையையும் விட்டுவிட்டு மேலான குணங்களைப் பெற்று பகவான் கிருபைக்கு பாத்திரமாகுங்கள் என்று அருளுரைக் கூறினார்கள் மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories