December 5, 2025, 6:42 PM
26.7 C
Chennai

அரங்கன் காட்டும் பூச்சாண்டி

IMG 20170904 WA0015 - 2025

கோவில் – திருவரங்கம்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாள் அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி
சேவை) இன்று.

மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா
அழகு உடையான்!

தோடவிழ் நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்
*அச்சோ ஒருவரழகியவா*
என்னும் படி,

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
“ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்”
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் “முடிவில்ல தோர் எழில்”
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே

என்று திருப்பாணாழ்வாரின் திருமொழியை நமக்கு காட்டுவதாய் திருவரங்கன் தன்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாளில்,

உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும் உண்டான்) பாலகனாய்
சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கண்ணன், ஊழிக் கூத்தின் கடைசியில்,
பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக்
குறித்து, கள்ளமற்ற குழந்தையாக உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு
குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்டியபடி,

*தன் திருமேனியில் ஸர்வ லோகங்களையும் காட்டி தானே பரத்துவம் என்பதை இங்கே
காட்டி அருளிகிறான்* அன்று யசோதைக்கு தன் திருவாயில் ஸர்வ லோகங்களையும் காட்டி
அருளியதை போன்றே இன்றும் நமக்கும் கருணை கொண்டு நம் அரங்கன் அங்கோ பாங்க சேவை
(பூச்சாண்டி சேவை) கொள்கிறார்.

இதையே கம்பரும்,
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
என்று அருளி செய்கிறார்.

அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி சேவை) அலங்காரம் பார்ப்பவர்களுக்கு அச்சம்
ஏற்படுவது போல் காட்சி அளிப்பதால் பூச்சாண்டி சேவை என்று அழைக்கப்படுகிறது.

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி சேவை)
பக்தர்கள் தரிசிக்கலாம். அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தானத்தில்
இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு எழுந்தருளுகிறார்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories