திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

02-01-2018 இன்று திருவாதிரை திருநாள்..

‘திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இந்த திருவாதிரை நாளன்று ஒரு வாய் களி தின்றால் அதன் பலன் அளவிடற்கரியது என்கிறது புராணம். திருவாதிரை விரதம் இருப்பவர்கள், களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரை தரிசித்து வருவது சிறப்பு.
மார்கழி திருவாதிரை நாளில்… ஸ்ரீதாணுமாலயனைத் தரிசிப்பது மகா புண்ணியம். குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து தெற்கே ஆறு கி.மீ தொலைவில் கன்யாகுமரி செல்லும் பாதையில் உள்ளது சுசீந்திரம். சிவன்,- பிரம்மா,- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் தலம்.
திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஒருமுறை முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகிய மூவரும் அனுசூயாவின் கற்பின் மகிமையைச் சோதிக்க அத்திரி முனிவரின் குடிலுக்கு தவசிகளாக வந்தனர். அவர்களை உபசரித்து விருந்தளிக்க முற்பட்ட அனுசூயாவிடம், அவர்கள், ‘‘குழந்தை இல்லா வீட்டில் உணவு ஏற்க மாட்டோம்!’’ என்று கூறினர். சற்றுத் திகைத்த அனுசூயா, பின்னர் மனதில் தன் கணவரை தியானித்து மூவரையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களுக்கு ஒரு தாயாக அமுதூட்டினாள்.
அனுசூயாவின் கற்பின் மேன்மையை அறிந்த முப்பெருந்தேவியரும் தங்கள் கணவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டினர். அனுசூயா அவர்களிடம், ‘‘உங்கள் நாயகர்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள். அதன்படியே அந்தக் குழந்தைகளை மூன்று தேவியரும் எடுத்து அணைத்துக் கொண்டனர். அப்போது ஒரு தவறு நிகழ்ந்தது. குழந்தைகளைச் சரியாக அடையாளம் தெரியாமல் தேவியர்கள் மாற்றி எடுத்தனர். இதனால் தேவதேவியரின் பெருமை குன்றியது. தங்களின் தவறுக்குக் கிடைத்த தண்டனை இது என மூவரும் கலங்கினர்.
அனுசூயா தன் கணவரின் பாத தீர்த்தத்தை அந்த குழந்தைகளின் மேல் தெளிக்க… அந்த மூன்று குழந்தைகளும் தங்கள் பழைய உருவத்தை அடைந்தனர். இந்த மயக்க நிலையில் ஏற்பட்ட தூய்மைக் குறைவு நீங்க… அந்தத் தலத்தில் உள்ள தீர்த்தம் அருகே ஹோம அக்னி வளர்த்து, மூன்று தேவியரும் நெருப்பில் இறங்கித் தம்மைப் புனிதப்படுத்திக் கொண்டனர். அது ஒரு திருவாதிரை நாளன்று நிகழ்ந்தது என்கிறது ஸ்தல புராணம்.
தேவர்களும் முனிவர்களும் தேவியருடன் கூடிய மும்மூர்த்திகளை அங்கு ஒருங்கே தரிசித்து மகிழ்ந்தனர். தேவர்கள் மறைந்ததும் அவ்விடம் இருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் எழும்பின. தாணு (சிவன்), மால் (விஷ்ணு), ஐயன் (பிரம்மா) இணைந்த தாணுமாலயனாக அந்தத் தலத்தில் எழுந்தருளினார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சுசீந்திரத்தில் திருவாதிரை தினம் சுமங்கலிப் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் திருவிழாக்களில் மார்கழித் திருவாதிரையும் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் மிகவும் பிரபலமானவை. பத்து நாட்கள் இங்கு நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடித் தேர் இழுப்பது கண்கொள்ளாக் காட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories