திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

02-01-2018 இன்று திருவாதிரை திருநாள்..

‘திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இந்த திருவாதிரை நாளன்று ஒரு வாய் களி தின்றால் அதன் பலன் அளவிடற்கரியது என்கிறது புராணம். திருவாதிரை விரதம் இருப்பவர்கள், களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரை தரிசித்து வருவது சிறப்பு.
மார்கழி திருவாதிரை நாளில்… ஸ்ரீதாணுமாலயனைத் தரிசிப்பது மகா புண்ணியம். குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து தெற்கே ஆறு கி.மீ தொலைவில் கன்யாகுமரி செல்லும் பாதையில் உள்ளது சுசீந்திரம். சிவன்,- பிரம்மா,- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் தலம்.
திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஒருமுறை முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகிய மூவரும் அனுசூயாவின் கற்பின் மகிமையைச் சோதிக்க அத்திரி முனிவரின் குடிலுக்கு தவசிகளாக வந்தனர். அவர்களை உபசரித்து விருந்தளிக்க முற்பட்ட அனுசூயாவிடம், அவர்கள், ‘‘குழந்தை இல்லா வீட்டில் உணவு ஏற்க மாட்டோம்!’’ என்று கூறினர். சற்றுத் திகைத்த அனுசூயா, பின்னர் மனதில் தன் கணவரை தியானித்து மூவரையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களுக்கு ஒரு தாயாக அமுதூட்டினாள்.
அனுசூயாவின் கற்பின் மேன்மையை அறிந்த முப்பெருந்தேவியரும் தங்கள் கணவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டினர். அனுசூயா அவர்களிடம், ‘‘உங்கள் நாயகர்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள். அதன்படியே அந்தக் குழந்தைகளை மூன்று தேவியரும் எடுத்து அணைத்துக் கொண்டனர். அப்போது ஒரு தவறு நிகழ்ந்தது. குழந்தைகளைச் சரியாக அடையாளம் தெரியாமல் தேவியர்கள் மாற்றி எடுத்தனர். இதனால் தேவதேவியரின் பெருமை குன்றியது. தங்களின் தவறுக்குக் கிடைத்த தண்டனை இது என மூவரும் கலங்கினர்.
அனுசூயா தன் கணவரின் பாத தீர்த்தத்தை அந்த குழந்தைகளின் மேல் தெளிக்க… அந்த மூன்று குழந்தைகளும் தங்கள் பழைய உருவத்தை அடைந்தனர். இந்த மயக்க நிலையில் ஏற்பட்ட தூய்மைக் குறைவு நீங்க… அந்தத் தலத்தில் உள்ள தீர்த்தம் அருகே ஹோம அக்னி வளர்த்து, மூன்று தேவியரும் நெருப்பில் இறங்கித் தம்மைப் புனிதப்படுத்திக் கொண்டனர். அது ஒரு திருவாதிரை நாளன்று நிகழ்ந்தது என்கிறது ஸ்தல புராணம்.
தேவர்களும் முனிவர்களும் தேவியருடன் கூடிய மும்மூர்த்திகளை அங்கு ஒருங்கே தரிசித்து மகிழ்ந்தனர். தேவர்கள் மறைந்ததும் அவ்விடம் இருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் எழும்பின. தாணு (சிவன்), மால் (விஷ்ணு), ஐயன் (பிரம்மா) இணைந்த தாணுமாலயனாக அந்தத் தலத்தில் எழுந்தருளினார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சுசீந்திரத்தில் திருவாதிரை தினம் சுமங்கலிப் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் திருவிழாக்களில் மார்கழித் திருவாதிரையும் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் மிகவும் பிரபலமானவை. பத்து நாட்கள் இங்கு நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடித் தேர் இழுப்பது கண்கொள்ளாக் காட்சி.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories