அவதார காரணம்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar 1
Bharathi theerthar 1

அதிகாரம்” தான் எல்லாப் பொருட்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று சிலர் கூறுவார்கள்.

அதிகாரம் செலுத்துவதில் அவ்வளவு விசேஷமாக ஒன்றும் இல்லை. இதே ரீதியில் நாம் எதை உயர்ந்தது என்று கருதினாலும் அது அவ்வாறு இருப்பதேயில்லை.

இவ்வாறிருக்கையில் “எதுதான் உண்மையில் மிகச் சிறந்த பொருள்?” என்பது இன்னும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

கடவுள் இந்தக் கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அவர் என்ன முடிவுக்கு வந்தார்? மற்றவர்களுக்கு உதவி செய்தல்தான் (பரோபகாரம்) சிறந்தது என்று உணர்ந்தார் அவர்.

பகவானுக்கு எந்த விதமான கடமையோ, எதையாவது அடைய வேண்டும் என்பதோ கிடையாது. காரணம், அவர் பூரணமானவர் (பரிபூர்ணர்) , பகவானே கூறியிருக்கிறார்.
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன I
நானவாப்தமவாப்தவ்யம்…….

“மூன்று லோகங்களிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. அடைய வேண்டியது எதுவும் என்னால் அடையப்படாததாக இல்லை.” இவ்வாறிருக்கையில் பகவான் எதற்காக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரஸிம்ஹ, வாமன, பரசுராம மற்றும் இராம அவதாரங்களை எடுத்துக்கொண்டார்?

“மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்பதுதான் அதற்குக் காரணமாகும், இராக்ஷஸர்கள் இடையூறு செய்து கொண்டிருந்தால் ஜனங்களுக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அந்த சமயம் கடவுள், “நான் இங்கேயே நிர்விகல்ப சமாதியில் இருந்துவிடட்டுமா அல்லது மக்களைக் காப்பாற்றுவதற்காகச் செல்லட்டுமா? இதில் எது சிறந்தது?” என்று சிந்தித்தாராம்.

ஒரு தராசை எடுத்து “கைவல்யம்” என்பதை ஒரு தட்டிலும் “பரோபகாரம்” என்பதை மறு தட்டிலும் இட்டுப் பார்த்தார். பரோபகாரம் தான் அதிக எடையுள்ளது என்பதை அது காட்டியது.

பரோபக்ருதிகைவல்யே தோலயித்வா ஜனார்தன: I
குர்வீமுபக்ருதிம் மத்வா:வதாரான் தசாக்ரஹீத் II
கைவல்யத்தையும் பரோபகாரத்தையும் நிறுத்துப் பார்த்த பகவான் பரோபகாரம்தான் அதிக எடை வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்து பத்து முறை அவதரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories