December 6, 2025, 12:03 PM
29 C
Chennai

வணங்க உகந்த வன்னியும், மந்தாரையும்..!

vanni mantharai Ganapathi
vanni mantharai Ganapathi

வன்னிமந்தாரை ஸ்ரீமகா கணபதி என்ற திருநாமத்துடனேயே புராதனப் பெருமைமிக்க விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது, வன்னியூரில்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், திருவாசல் என்ற இடத்தில் பொதுக்குளம் வெட்டத் துவங்கியபோது கிடைத்தவர், இந்த கணபதி. அப்போது இப்பகுதி, வன்னிமந்தாரை மரங்களடர்ந்த காடாக இருந்துள்ளது.

வன்னி என்பவள், மாமுனிவர் அவுரவர் மேதா தம்பதியரின் மகள். அவள் கணவன் மந்தாரன், தௌமிய முனிவன் மகன்.

vanni
vanni

இத்தம்பதியினர் ஒரு சமயம், மகாகணபதியின்வடிவை உடையவரும் அவரது பக்தருமான புருகண்டி. முனிவரைக் கண்டனர் யானை வடிவில் துதிக்கையுடன் இருந்த முனிவரின் தோற்றத்தைப் பார்த்து வன்னி பயந்து ஓடுகிறாள்.

மந்தாரனோ புருகண்டியை கிண்டல் கேலி செய்தும், மிரட்டவும் செய்கிறான். புருகண்டி, வினாயகர் பெருமைகளையும் தான் யார் என்பதையும் எடுத்துக் கூறியும் தம்பதியினர் அதைப் பெருட்படுத்தாது கேவலப்படுத்தி, மரியாதை குறைவாகவே நடந்து கொள்ள, புருசுண்டி முனிவர் சாபம் இடுகிறார்.

வன்னி, வன்னி மரமாகவும். மந்தாரன், மந்தாரை மரமாகவும் மாறிவிடுகிறார்கள்.

mantharai
mantharai

தவறை உணர்ந்து அவர்கள் வருந்தி, கணபதியிடம் சாப விமோசனம் கேட்கின்றனர். அவரோ, தனது அடியாரை அவமானப்படுத்திய குற்றத்தை தான் மன்னிக்க விருப்பம் இல்லையெனவும், இருப்பினும் அவர்களது பெயர் நிலைக்க, தான் வன்னி மந்தாரையை உகந்த பூஜைப் பொருளாக ஏற்று, வன்னியூர் என்கிற கிராமத்தில் கோயில் கொள்வேன் எனவும் கூறி ஆசியளித்தார். இன்றும் அந்த வாக்குப்படி கணபதி, இத்தலத்தில் கோயில் கொண்டருள்கிறார்.

வன்னி இலையாலும், மந்தாரை புஷ்பத்தாலும் தன்னை அர்ச்சித்து வழிபாடு செய்பவர்களது கஷ்டங்களைப் போக்கி ஆறுதலளிக்கிறார் வன்னி மந்தாரை கணபதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories