குரு: ஆச்சார்யாள் அருளுரை!

abinava vidhyatheertha swamiji - 2026

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

“குரு காரணமில்லாமல் அருள்செய்யும் கருணைக்கடல் ; அவரை வணங்கும் புனிதமானவர்களுக்கு அவர் நண்பர்” என்று விவேகசூடாமணியில் கூறப்பட்டுள்ளது.

யாருக்காவது குரு ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தவேண்டியிருந்தால் அவருடைய தயைக்குக் காரணமே கிடையாது. சிஷ்யன் அவரிடத்தில் சரணாகதியாய் வந்தான் என்றால் அந்தக் காரணம் ஒன்றே போதும்.

ஞானம் சம்பாதிப்பதற்கு நாம் குருவிடம் செல்லவேண்டும். அதனால் அந்த குருவும் தத்துவத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட குருவின் பெருமையை சங்கரர், “ஞானத்தை அளிக்கக்கூடிய ஸத்குருவிற்கு மூவுலகங்களிலும் உவமை கிடையாது.

குருவானவர் தன்னுடைய பாதங்களை அடைக்கலமாக வைத்துக்கொண்ட சிஷ்யனுக்கு தனது நிலைமையையே அளிக்கிறார். ஆதலால் அவர் ஒப்பில்லாதவர் ; உலகிற்கு அப்பாற்பட்டவர். (லெளகிகமான குருவிற்கே உவமை கூற முடியாதபோது ஸத்குருவிற்கு எவ்வாறு உவமை கூற முடியும் ? )” என்று வர்ணித்துள்ளார்.

“குரு என்றால் யார் ? அவர் எப்பேற்பட்டவர் என்பதற்கு ஏதாவது ஒரு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியுமா ? “ என்று கேட்டால் “அவருக்கு த்ருஷ்டாந்தமாக எதைச் சொல்வது என்று தெரியவில்லை” என உரைக்கிறார் சங்கரர்

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

ஸ்பர்சமணி என்ற கூறப்படும் ஒரு மணி ஒன்று இருந்தது அந்த மணியின் ஸ்வபாவம் என்னவென்றால் அதன்மீது பட்ட எந்த இரும்பும் தங்கமாக மாறிவிடும். இரும்பின் விலை மிகவும் குறைவு.

அப்பேற்பட்ட இரும்பைத் தங்கமாக மாற்றும் அந்த ஸ்பர்சமணிக்கு எத்தகைய ஓர் அரிய சக்தி இருந்தது என்பதை, நாம் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு உத்தமமான பொருளாக ஸ்பர்சமணி இருப்பதைப்போல் ஸத்குருவும், ஒன்றுமே அறிவு இல்லாது நின்றுகொண்டே மூத்திரம் போகும் பழக்கம் உள்ளவனும், எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியாமல் கண்டதைச் சாப்பிடுபவனும், எது ஆரோக்கியமில்லை எது ஆரோக்கியம் என்று தெரியாமல் இருப்பவனும், உலகத்தில் எவ்வாறு பத்து ஜனங்களுடன் பழக வேண்டும் என்று தெரியாமலும் இருக்கும் சிறிய குழந்தையைப் போலுள்ள சிஷ்யனை உலகத்தில் சகல ஜனங்களும் கொண்டாடக்கூடிய மிகவும் உயர்ந்த பிரஜையாக மாற்றிவிடுவார். அத்தகைய சக்தி குருவிற்கு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories