குரு: ஆச்சார்யாள் அருளுரை!

abinava vidhyatheertha swamiji - 2026

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

“குரு காரணமில்லாமல் அருள்செய்யும் கருணைக்கடல் ; அவரை வணங்கும் புனிதமானவர்களுக்கு அவர் நண்பர்” என்று விவேகசூடாமணியில் கூறப்பட்டுள்ளது.

யாருக்காவது குரு ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தவேண்டியிருந்தால் அவருடைய தயைக்குக் காரணமே கிடையாது. சிஷ்யன் அவரிடத்தில் சரணாகதியாய் வந்தான் என்றால் அந்தக் காரணம் ஒன்றே போதும்.

ஞானம் சம்பாதிப்பதற்கு நாம் குருவிடம் செல்லவேண்டும். அதனால் அந்த குருவும் தத்துவத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட குருவின் பெருமையை சங்கரர், “ஞானத்தை அளிக்கக்கூடிய ஸத்குருவிற்கு மூவுலகங்களிலும் உவமை கிடையாது.

குருவானவர் தன்னுடைய பாதங்களை அடைக்கலமாக வைத்துக்கொண்ட சிஷ்யனுக்கு தனது நிலைமையையே அளிக்கிறார். ஆதலால் அவர் ஒப்பில்லாதவர் ; உலகிற்கு அப்பாற்பட்டவர். (லெளகிகமான குருவிற்கே உவமை கூற முடியாதபோது ஸத்குருவிற்கு எவ்வாறு உவமை கூற முடியும் ? )” என்று வர்ணித்துள்ளார்.

“குரு என்றால் யார் ? அவர் எப்பேற்பட்டவர் என்பதற்கு ஏதாவது ஒரு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியுமா ? “ என்று கேட்டால் “அவருக்கு த்ருஷ்டாந்தமாக எதைச் சொல்வது என்று தெரியவில்லை” என உரைக்கிறார் சங்கரர்

ALSO READ:  மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

ஸ்பர்சமணி என்ற கூறப்படும் ஒரு மணி ஒன்று இருந்தது அந்த மணியின் ஸ்வபாவம் என்னவென்றால் அதன்மீது பட்ட எந்த இரும்பும் தங்கமாக மாறிவிடும். இரும்பின் விலை மிகவும் குறைவு.

அப்பேற்பட்ட இரும்பைத் தங்கமாக மாற்றும் அந்த ஸ்பர்சமணிக்கு எத்தகைய ஓர் அரிய சக்தி இருந்தது என்பதை, நாம் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு உத்தமமான பொருளாக ஸ்பர்சமணி இருப்பதைப்போல் ஸத்குருவும், ஒன்றுமே அறிவு இல்லாது நின்றுகொண்டே மூத்திரம் போகும் பழக்கம் உள்ளவனும், எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியாமல் கண்டதைச் சாப்பிடுபவனும், எது ஆரோக்கியமில்லை எது ஆரோக்கியம் என்று தெரியாமல் இருப்பவனும், உலகத்தில் எவ்வாறு பத்து ஜனங்களுடன் பழக வேண்டும் என்று தெரியாமலும் இருக்கும் சிறிய குழந்தையைப் போலுள்ள சிஷ்யனை உலகத்தில் சகல ஜனங்களும் கொண்டாடக்கூடிய மிகவும் உயர்ந்த பிரஜையாக மாற்றிவிடுவார். அத்தகைய சக்தி குருவிற்கு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories