விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (13): திட்டமிடலும் செயல்பாடும்!

vijayapadam 1 - 2026

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -13
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில்  ராஜி ரகுநாதன்

13. Planning & Strategy
தொலை நோக்குப் பார்வை
கட்டாயம் தேவை!

தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு அரசாட்சி நடந்தகாலத்தில் நடந்த கதை இது. தர்மப்ரஸ்தம் என்ற பெயர் கொண்ட தேசம் ஒன்று இருந்தது. பெயருக்குத் தகுந்தாற்போல் அரசனும் மக்களும் தர்மத்தோடு நடந்து கொண்டனர்.

ஐந்தாண்டுகளுக்கொரு முறை அரசனைத் தேர்ந்தெடுப்பதும் அவருடைய பதவிக்காலம் முழுமையடைந்தவுடனே அந்த அரசனை பூர்ணா நதியின் அக்கரையில் இருக்கும் கொடிய விலங்குகளோடு கூடிய ஒரு காட்டிற்கு சகல அரச மரியாதையோடும் அனுப்பி வைப்பதும் அந்த தேசத்தின் வழக்கம்.

அதன் பின் அந்த அரசன் என்ன ஆனான் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. நதியைத் தாண்டும் போது பதவிக் காலம் முடிந்த அந்த அரசர்கள் மிகவும் வருந்துவர். அவர்களுடைய துயரத்தைப் பார்த்து படகில் கொண்டு விடும்  படகோட்டி மிகவும் இரக்கப்படுவான். அந்த படகோட்டி இதுவரை எட்டு அரசர்களைப் பார்த்துள்ளான்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஆனால் இந்த ஒன்பதாவது அரசர் சிரித்தபடி உற்சாகமாக காணப்பட்டார்  காட்டிற்குச் செல்வதில் ஆர்வத்தோடு இருந்தார். அதைப் பார்த்து படகோட்டிக்கு வியப்பாக இருந்தது.

ஒன்பதாவது அரசரிடம் அது பற்றி கேட்ட போது, “எனக்கு பதவிப் பிரமாணத்தின் போதே இது ‘ஐந்து வருட வைபவம்’ என்று தெரியும். அதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து என் திட்டத்தைத் தொடங்கி விட்டேன். நதியின் அக்கரையில் ஒரு சிறு கிராமத்தை நிர்மாணித்தேன். அங்கிருக்கும் மக்கள் என் வருகைக்காக எதிர்பார்த்திருப்பர்” என்றான்.

ram - 2026

அரசன் கூறியது போலவே நூற்றுக்கணக்கான மக்கள் நதிக் கரையில் புது அரசனுக்கு வரவேற்பு அளிப்பதற்கு வந்திருப்பதை படகோட்டி கவனித்தான்.

உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. அதானை சரியான சமயத்தில் வடிவமைத்துக் கொள்ளும் புத்திகூர்மை பெற்றிருக்க வேண்டும். முன்னோக்குப் பார்வை முக்கியம் என்பதை இந்த கதை போதிக்கிறது.

தலைவன் நிகழ்காலத்தில் இருந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். வரப் போகும் நாட்களில் தன் அரசாட்சி நன்கு நடக்க வேண்டுமென்றால் இந்த பார்வை தேவை. குறைந்த பட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்காவது நம் திட்டம் என்ன என்பது குறித்து தலைவன் சிந்திக்க வேண்டும். நாட்டை ஆள்பவராகட்டும். நிறுவனங்களின் உரிமையாளராகட்டும் எதிர்காலத்தில் வெற்றிகளை சாதிப்பதற்குத் தகுந்த திட்டங்களை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மகாபாரதத்தில் விதுரன் தர்ம ராஜனிடம் கூறுகையில் நாளைய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்யவேண்டிய வேலையை காலையே செய்யவேண்டும் என்று போதிக்கிறார். நல்ல எதிர்காலத்திற்காக இவ்விதமான சிந்தனை அவசியம்.

திவசேனைவ தத்குர்யாத் யேன ராத்ரௌ சுகம் வசேத் !
அஷ்டமாசேன தத்குர்யாத் யேன வர்ஷா: சுகம் வசேத் !!

(மகாபாரதம் உத்தியோக பர்வம் 36-37)

பொருள்:- எந்த வேலை செய்தால் இரவு நிம்மதியாக உறங்க முடியுமோ அந்த வேலையை பகலிலேயே செய்து முடிக்க வேண்டும். நான்கு மாத மழை காலத்தில் நிம்மதியாக கழிப்பதற்கு ஏதுவாக மீதி உள்ள எட்டு மாதங்களில் வேலை நடை பெற வேண்டும்.

முதிய வயதில் சுகமாக வாழ இளம் வயதில் உழைக்க வேண்டும். அடுத்த பிறவிக்கான சுகத்திற்காக இப்பிறவியிலேயே பாடுபட வேண்டும். இதுவே பாரதிய கர்ம சித்தாந்தம்.

சுபம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories