“வட சொற்கள் தமிழாக்கம்” (பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட தள்ளி, சிரிப்புக்கிடமான தப்பிதங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டார். “மந்தஹாஸ”த்தை ‘மந்தகாச’மாக்கிப் புன்னகையை slight T.B. ஆக்குவானேன்?” என்று கேட்டுப் புன்னகையாயின்றிப் பெருநகையே புரிந்தார்! (மந்தமான காசம் என்றால் லேசான எலும்புருக்கி நோய்தானே?) ஜாதகம்,ஸாதகம் (ஸாதக-பாதகம் என்பதில் வருவது), சாதகம் (வானிலிருந்து பெய்யும் மழைத் துளியை மட்டுமே பருகும் chaatakam என்ற பறவை) என்ற மூன்றையும் ‘சாதகம்’ என்று எழுதி குழப்புவானேன் எனக் கேட்டார். ‘ஜபிப்பது’ என்பதை ‘சபிப்பது’ என்று எழுதிச் செய்யும் அர்த்த விபரீதத்தை எப்பேர்ப்பட்ட சிரிப்புடன் எடுத்துக் காட்டினார்?. ‘ஹ’வைக் ‘க’ ஆக்குவதில், வணங்கியோரின் துயரைப் போக்கும் ‘பிரணதார்த்திஹரன்’, வணங்குவோருக்குத் துயரை உண்டாக்கும் ‘பிரணதார்த்திகரன்’ ஆகி விடுகிறானே என்றார்!. ‘ரஸனை’ என்பதே ‘சுவை’; ‘ரச(cha)னை’ என்றால் உருவாக்குவது,உண்டாக்குவது எனப் பொருள்.தற்காலத்தில் இலக்கியச் சுவையுணர்வை ‘ரசனை’ என்றெழுவது உண்மையில் இலக்கியப் படப்பைத்தான் குறிக்குமேயன்றி, இலக்கிய ரஸிப்பையல்ல என்று காட்டினார். அவசியமான இடத்தில் வட சொற்களை ஓற்றெழுத்திலேயே தொடங்கலாம்; இல்லாவிடின் ‘த்ருட(திடமான) மனம் வேண்டும்’ என்பது ‘திருட(திருடவதற்கு) மனம் வேண்டும்’ என்றாகுமே என நகைத்தார்.
“வட சொற்கள் தமிழாக்கம்”
Popular Categories


