தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசி மகத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Published:

நெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற  காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ​காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று வந்தது. 

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருநாளை முன்னிட்டு இன்று காலை 9.20 மணிக்கு மாசித் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ​தேரில் சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்​. பின்னர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தேரை வடம்பிடித்து இழுத்து ​துவக்கி வைத்தார்.

சுவாமி தேர் முக்கிய ரத வீதிகள்​ வழியாக  சுற்றி நிலைக்கு வந்ததும் அம்மன் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தின் போது வெயில் அதிகமாக காணப்பட்டபோதும் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ​காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு இருந்தனர்.

படங்கள்: வீரமணி

Related articles

Recent articles

spot_img