சபரிமலை… பச்சை ஆலமரத்தில் பற்றிய தீ! பதற்றத்தில் பக்தர்கள்!

Published:

sabarimalai6 baktas - 2026

சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்தது

சபரிமலையில் இதுவரை இல்லாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதன் வெளிப்பாடாகத்தான் பச்சை ஆலமரத்தின் இலையில் தீப்பற்றி உள்ளது இது அசம்பாவிதத்தின் வெளிப்பாடு என்று ஐயப்பனின் பக்தர்கள் கதறுகின்றனர்

பச்சை ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசாக பக்தர்கள் எடுத்துக்கொள்ளவில்லை சபரிமலையில் எல்லா வயது பெண்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கடந்த சில நாள்களாக கம்யூனிஸ்டு பெண்கள் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

இது மிகப்பெரிய கலவரத்தை கேரளத்தில் ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் இன்றும் நாளையும் அவர்கள் தரிசனத்துக்காக காத்து இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசில் பக்தர்கள் விடவில்லை

மகரவிளக்கு நேரத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலைக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி அவற்றில் கருத்துகளை எழுதி வருகின்றனர்

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இருந்தபோதும் ஆலமரத்தில் தீப்பற்றியது பக்தர்களுக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது சபரிமலையில் நடுத்தர வயது பெண்களை அனுமதித்ததன் மூலம் கேரளத்தை அமைதியின்மை ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலை விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே கேரளத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்கின்றனர் பக்தர்கள்

ஆலமரத்தில் பற்றிய தீ… வீடியோ காட்சி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img