மாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா!

cuddalore vaishnava function3 - 2026 108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.

இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில் மூவரும் சேரும் பொழுது தான் திவ்ய ப்ரபந்தங்கள் தோன்றின என்று வரலாறு கூறுகின்றது. இந்தத் திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீ திருவிக்கிரமன் என்றும் உத்ஸவர் ஸ்ரீ ஆயனார் என்றும் அழைக்கப்  படுகிறார்கள். இந்த மூலவர் திருவிக்கிரமனைக் காண நம் இரண்டு கண்கள் போதாது! அவ்வளவு அழகு!!

cuddalore vaishnava function2 - 2026

உத்ஸவர் ஸ்ரீ ஆயனார் ஒவ்வொரு வருடமும் மாசிமகத்தின் போது கடலூரில் உள்ள தேவனாம்பட்டினத்திற்கு எழுந்தருளி கடலில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

திருக்கோவலூரில் இருந்து சுமார் 75 கிமீ எழுந்தருளி இந்த உத்ஸவத்தை கண்டருள் கிறார். வழிநடையில் பெருமாள் பல ஊர்களுக்கு விஜயம் செய்கிறார். கடந்த 19ஆம் தேதி பௌர்ணமியன்று தீர்த்தவாரி கண்டருளி கடலூரில் உள்ள திருப்பாப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் மண்டகப்படி கண்டருளினார்.

cuddalore vaishnava function4 - 2026

இந்த வைபவத்தில் தேவநாதன் மற்றும் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீ மணவாள மாமுனிகளும் கலந்து கொண்டார். தொடர்ந்து 20ஆம் தேதியன்று ஆயனாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளும் திருப்பாப்புலியூர் வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

cuddalore vaishnava function5 - 2026

அன்று காலை ஆயனார் கருடசேவையில் எழுந்தருள மணவாளமாமுனிகள் எதிரில் எழுந்தருள கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. தொடர்ந்து மாலை தோப்பில் பெருமாளும் ஆசார்யரும் கொலுவு வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளினர்.

இந்த வைபவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமிகள், திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் தலைமை தாங்கி கலந்து கொண்டனர். இந்த விழாவில் கீதாசார்யன் ஆன்மீக இதழின் ஆசிரியர் Dr ஸ்ரீ உவே MA வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி, பெருமாள் மற்றும் ஆசார்யர் முன்னிலையில் “ஆயனும் மாயனும்” என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

cuddalore vaishnava function1 - 2026

தொடர்ந்து இரு ஜீயர் ஸ்வாமிகளும் தங்கள் மங்களாசாசன உரைகளை நிகழ்த்தினர். இதை அடுத்து, பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த வைபவங்களை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இவ்விழாவை சிறப்பாக நடத்திய திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு ஊர்மக்கள் தங்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

– எம்.ஏ.வி  மதுசூதனன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories