அக்ஷய திரிதியை?? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு கிராக்கி?? ஏன் தங்கம் வாங்கினால் தான்,பலமா. மற்ற பொருட்களினால பலமில்லையா??
வளர்பிறையில் வரும் திரிதியை என்பது வாழ்வை வளமாக்கும் ஒரு திதிதான்… ஆனால் அதில் ஏதேனும் பொருட்கள் வாங்கியே ஆக வேண்டுமா? ஆம் வாங்கினால் பொருள் பெருகாதுங்க! அதற்கு மாறா நம்ம வாழ்க்கை பெருகுமுங்க,,,இது நிதர்சன உண்மைங்க!!!!
சரி விசயத்துக்கு வர்றேனுங்க ! உப்பு மகாலட்சுமி அம்சமுங்க மஞ்சள் குருவோட அம்சமுங்க! இவங்க ரெண்டுபேருதானுங்க பணத்தோட அதிபதி…
பணக்காரன்,ஏழை இதெல்லாம் சாஸ்திரத்துக்கு கட்டுபடாதுங்க! ஆனா யாரு என்ன பொருள் வாங்கினா,பலம்னு தெரிஞ்சு வாங்குங்க!!
பொதுவா அட்சய திரிதியை அன்னைக்கு விரலி மஞ்சளும்,கல் உப்பும் வாங்கி பாருங்க…. உங்களோட வாழ்க்கை நிச்சயமா…அடுத்த நிலைக்கு உயரும்.!
தங்கம் வாங்கறதால தப்பு ஒன்னும் இல்ல அதைவிட லட்சம் மடங்கு பவர், இந்த விரலி மஞ்சளுக்கும், கல் உப்புக்கும் அதிகமுங்க!!!!
விரலிமஞ்சள் வாங்கினா தங்கமும் பணமும் அடுத்த வருசம் தானா பெருகும். அனுபவ உண்மை!!! இது எல்லா வளர்பிறை திரிதியைக்கும் பொருந்தும்…


