வாரத்தின் ஏழு நாளும் பைரவர் வழிபாடு! வந்து சேரும் வளங்கள் நிறைவோடு!

Published:

kundatam kala bairavar1 - 2026

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.

ஞாயிற்றுகிழமை : ராகுகாலத்தில் ருத்ராபிஷேகம், வடைமாலை சாற்றி வழிபட்டால் திருமணப் பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும் அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கள்கிழமை :வில் வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கள் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

செவ்வாய்கிழமை : மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

புதன்கிழமை :நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

வியாழக்கிழமை : விளக்கு ஏற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

வெள்ளிக்கிழமை : மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வர்தால் செல்வப் பேறு கிடைக்கும்.

சனிக்கிழமை :சனி பகவானுக்கு குரு பைரவர் ஆகவே சனிக்கிழமை 9 முதல் 10.30 ராகு வேளையில் பிரத்யோகமாக வழிபட்டால 7 1/2 சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமசனி விலகி நன்மையாக நடக்கும் .கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

bairavar moolavar - 20266 தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லா தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிடம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்யோகத்தில் மதிப்பும், பதவி உயர்வு கிட்டும், தொழிலில் லாபம் கிட்டும், சனி பிரதோஷம் அன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.நல்லருள் கிட்டும் பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றை தனி தனியாக தீபமாக ஏற்ற வேண்டும், அகல் விளக்கில் ஏற்ற வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஸ்ரீபைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் பைரவரை வணங்கி பைரவர்காயத்ரி மந்திரம், கால பைரவா அஷ்டகம் படித்து வர எதிரிகளை அழித்து கடன்கள் தீர்ந்து யம பயம் இன்றி நீண்ட நாள் வாழலாம்.

ஓம் பைரவா போற்றி

  • பரிகார ஜோதிடர் S காளிராஜன்,
    ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம் – இலத்தூர், நெல்லை (மாவட்டம் )

Related articles

Recent articles

spot_img