அவாளுக்குத் தெரியாதது எது?

“அவாளுக்குத் தெரியாதது எது?”

(பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்)

(மெய் சிலிர்க்கும் கட்டுரை)
51895257 2373749116003573 333922437269815296 n - 2026
கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது. இளையாத்தங்குடியில் முதன் முறையாக வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்தது. அங்கே மகானும் எழுந்தருளி அனுக்கிரகம் செய்து கொண்டு இருந்த சமயம் அது.

ஒருநாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் மகான் கூப்பிட்டு அனுப்பினார்.

நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார்.பின்னர், “தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை” என்று அந்த பெரிய மகாநாட்டில் பங்கு பெற்ற மேதாவிகளிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார்.பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், “தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை” என்று உடனே பதில் சொல்லிவிட்டனர்.

“சரி.அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது? என்று ஸ்ரீபெரியவா அவர்களிடம் கேட்டார்.

“அர்ஜுனன் தபஸ்” என்றனர்.”

அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?” என்று ஸ்ரீபெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்து அதை மகானிடம் காட்டினர்.

அந்த பெரிய புகைப்படத்தினை அவர்கள் ஸ்ரீபெரியவாள் முன் வைத்து நிற்க, அதை அவர் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார்.பிறகு சொன்னார்.

“இந்த சிற்பத்திலே அர்ஜுனன் பஞ்சாக்னி நடுவிலே தபஸ் பண்ற மாதிரி இருக்கு.இப்படி தபஸ் பண்ற நேரம் உச்சிவேளைன்னு நமக்கு தெரியறது மாதிரி சிற்பி செஞ்சிருக்கார்.அது எப்படின்னு யாராவது சொல்ல முடியுமா” என்று ஸ்ரீபெரியவா கேட்டார்.
புதிர் போன்ற அக்கேள்விக்கு பதில் சொல்ல அங்கே யாருக்குமே தெரியவில்லை.சென்னை தொல் பொருள் ஆராய்ச்சி இயக்குனர் திரு நாகசாமி உட்பட அங்கு வந்திருந்த அனைத்து ஸ்தபதிகளுக்கும் இதற்கான விடை தெரியவில்லை.எல்லோரும் சிந்தித்தபடி நிற்க

ஸ்ரீபெரியவா, “நல்லா யோசனை செஞ்சி பார்த்துண்டு நாளைக்கு வந்து சொல்லுங்களேன்” என்று அவர்களது தர்ம சங்கடத்தை அந்த நேரம் விலக்கி அவர்களை அனுப்பிவைத்தார்.

ஆனால் அதற்கான தக்க பதில் அவர்களின் யோசனையில் உதிக்காததால் அதே தர்ம சங்கடத்துடன் அடுத்த நாளும் ஸ்ரீபெரியவா சன்னதியில் வந்து நின்றனர்.”எங்களுக்கு நிச்சயமா எதுவும் தெரியல்லே…ஸ்ரீபெரியவா தான் எங்களுக்கு விளக்கம் தரணும்” என்றார்கள் பவ்யமாக.

ஸ்ரீபெரியவா சொன்னார்……..

“சுத்திலும் நெருப்பா சூழ்ந்திருக்க பஞ்சாக்னி தபஸ் சரியா பகல் 12 மணிக்கு மேலே ஒரு முகூர்த்தகாலம். அதாவது 1.30 மணி நேரம் செய்ய வேண்டிய தபஸ், இதை அர்ஜுனன் அந்த நேரத்திலே தான் செஞ்சிருக்காருன்னு சிற்பத்திலே காட்ட முடியாது இல்லையா? அதனாலே சிற்பத்தோட சம்பந்தப்படாம ஒரு ஓரம் வெறும் எலும்புக் கூடாக ஒரு முனிவரை சிற்பி செதுக்கியிருக்கார். அந்த முனிவர் சைகையால் முத்திரை போட்டுண்டு சூரியனை தரிசிக்கிற மாதிரி இருக்கு. எப்பவும் இது போல முத்திரை போட்டு சூரியனை பார்க்கிற நேரம், சூரியன் நடுப்பகல்லே தலைக்கு நேர்மேலே உச்சியிலே வர்ற போதுதான். இதைத்தான் சிற்பி சூரியனையா, அந்த முனிவரை செதுக்கி அந்த நேரத்தை நாம தெரிஞ்சுக்கிற மாதிரி பண்ணியிருக்கார்.”

இப்படி சூட்சுமான விஷயங்களை ஸ்ரீபெரியவாளாலே மட்டுந்தான் விளக்க முடியும். எத்தனை படிச்சு இருந்தாலும், எங்களால் இதைத் தெரிஞ்சுக்க முடியாது” என்ற அவர்கள் ஸ்ரீபெரியவாளை பூர்ணமாக அன்று உணர்ந்து வணங்கி எழுந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories