அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?

abinava vidhya theerthar - 2026அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?

இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் அருளிய அநியாயம் செய்பவர்களை இறைவன் தண்டிப்பது இல்லையா என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.

எப்போது அவனுடைய கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் நிலை வருகிறதோ அப்போது அவன் அடியோடு நாசம் அடைந்து விடுகிறான். எப்போது அந்த சமயம் வரும்? முன்று வருடங்களிலோ முன்று மாதங்களிலோ முன்று பட்சங்களிலோ , முன்று நாட்களிலோ அப்படி தண்டனையை தீச்செயல்களுக்காக அனுபவிக்க நேரிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாம் உலகத்தில் பார்க்கிறோம் . கிரிமினல் வழக்குகள் என்பதும் சிவில் வழக்குகள் என்பதும் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. ஒரு சிவில் வழக்கு என்பது இருபது வருடங்கள் வரையில் கூட முடிவடையாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு கிரிமினல் வழக்கு அதைக் காட்டிலும் சீக்கிரம் முடிவடைகிறது . சுமார் ஆறு மாதங்களிலேயே குற்றவாளி பலனை அனுபவிக்க நேரிடலாம். இந்த வித்தியாசம் ஏன்? கிரிமினல் வழக்குகளுக்கு உடனே தண்டனை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.சிவில் வழக்குகளுக்கு அப்படி இல்லை.

court 1 - 2026அதேபோல் இறைவனின் சந்நிதியிலும் ஒருவன் செய்த கர்மா தீவிரமாக இருந்தால் உடனடியாக தண்டனை கிடைத்து விடும். நாம் செய்யும் கர்மா அவ்வளவு தீவிரமாக இல்லை என்றால் நாம் சாகும்வரை அதனுடைய பலனை நாம் அனுபவிக்காமல் இருக்கலாம். அதைக்கொண்டு நாஸ்திகர்கள் இவன் செய்த கர்மாவிற்குப் பலனே இல்லை என்பார்கள்.அவ்வாறு இருந்து இருந்தால் சாஸ்திரங்களின் உபதேசம் எல்லாம் வீணாக உள்ளவையாகிவிடும் .ஒரு பிறவியில் பலன் கிடைத்தே தீரும் . இவ்வாறு இல்லாவிட்டால் காரியம் காரணம் என்ற அமைப்பிற்கே உலகத்தில் இடையுறு வரும்.

ALSO READ:  சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

நாம் செய்யும் கர்மாவிற்கு ஏதாவது ஒரு காலத்தில் பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தான் எத்தனை வயதானாலும் ஒருவன் அனைத்து முயர்சிகளுடனும் அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும்.அது இப்போது பலன் அளிக்காவிட்டாலும் மற்றோரு பிறவியில் ( அறிவு) பெற எளிதாக இருக்கும். என்று கூறியுள்ளார்.அப்படி வயதானாலும் கல்வியைக் கற்றுக் கொள் என்றார். karma - 2026இப்பிறவியில் படிப்புக்கு பலன் கிடைக்காமல் போனாலும் அந்த முயற்சி வீணாகாது. அடுத்தப் பிறவியில் நாம் எளிதாக அக்கல்வியைக் கற்றுக் கொள்ளலாம்.
இதெல்லாம் எதை தெரிவிக்கிறது ? நாம் செய்த கர்மா விற்கும் அவசியமாக பலன் உண்டு.இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.இன்பத்தை விரும்பினால் நாம் தர்மத்தை செய்ய வேண்டும்.நாம் இப்போது அதர்மத்தை செய்து விட்டால் பிறகு துன்பம் தான் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories