அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?

abinava vidhya theerthar - 2026அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?

இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் அருளிய அநியாயம் செய்பவர்களை இறைவன் தண்டிப்பது இல்லையா என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.

எப்போது அவனுடைய கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் நிலை வருகிறதோ அப்போது அவன் அடியோடு நாசம் அடைந்து விடுகிறான். எப்போது அந்த சமயம் வரும்? முன்று வருடங்களிலோ முன்று மாதங்களிலோ முன்று பட்சங்களிலோ , முன்று நாட்களிலோ அப்படி தண்டனையை தீச்செயல்களுக்காக அனுபவிக்க நேரிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாம் உலகத்தில் பார்க்கிறோம் . கிரிமினல் வழக்குகள் என்பதும் சிவில் வழக்குகள் என்பதும் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. ஒரு சிவில் வழக்கு என்பது இருபது வருடங்கள் வரையில் கூட முடிவடையாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு கிரிமினல் வழக்கு அதைக் காட்டிலும் சீக்கிரம் முடிவடைகிறது . சுமார் ஆறு மாதங்களிலேயே குற்றவாளி பலனை அனுபவிக்க நேரிடலாம். இந்த வித்தியாசம் ஏன்? கிரிமினல் வழக்குகளுக்கு உடனே தண்டனை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.சிவில் வழக்குகளுக்கு அப்படி இல்லை.

court 1 - 2026அதேபோல் இறைவனின் சந்நிதியிலும் ஒருவன் செய்த கர்மா தீவிரமாக இருந்தால் உடனடியாக தண்டனை கிடைத்து விடும். நாம் செய்யும் கர்மா அவ்வளவு தீவிரமாக இல்லை என்றால் நாம் சாகும்வரை அதனுடைய பலனை நாம் அனுபவிக்காமல் இருக்கலாம். அதைக்கொண்டு நாஸ்திகர்கள் இவன் செய்த கர்மாவிற்குப் பலனே இல்லை என்பார்கள்.அவ்வாறு இருந்து இருந்தால் சாஸ்திரங்களின் உபதேசம் எல்லாம் வீணாக உள்ளவையாகிவிடும் .ஒரு பிறவியில் பலன் கிடைத்தே தீரும் . இவ்வாறு இல்லாவிட்டால் காரியம் காரணம் என்ற அமைப்பிற்கே உலகத்தில் இடையுறு வரும்.

நாம் செய்யும் கர்மாவிற்கு ஏதாவது ஒரு காலத்தில் பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தான் எத்தனை வயதானாலும் ஒருவன் அனைத்து முயர்சிகளுடனும் அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும்.அது இப்போது பலன் அளிக்காவிட்டாலும் மற்றோரு பிறவியில் ( அறிவு) பெற எளிதாக இருக்கும். என்று கூறியுள்ளார்.அப்படி வயதானாலும் கல்வியைக் கற்றுக் கொள் என்றார். karma - 2026இப்பிறவியில் படிப்புக்கு பலன் கிடைக்காமல் போனாலும் அந்த முயற்சி வீணாகாது. அடுத்தப் பிறவியில் நாம் எளிதாக அக்கல்வியைக் கற்றுக் கொள்ளலாம்.
இதெல்லாம் எதை தெரிவிக்கிறது ? நாம் செய்த கர்மா விற்கும் அவசியமாக பலன் உண்டு.இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.இன்பத்தை விரும்பினால் நாம் தர்மத்தை செய்ய வேண்டும்.நாம் இப்போது அதர்மத்தை செய்து விட்டால் பிறகு துன்பம் தான் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories