“டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா”

“டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா”

(“இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதி களுக்கெல்லாம் போயிருக்கேள் அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான் அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!–பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் 17352237 1601442589873347 7280143330772355007 n - 2026
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(சுருக்கமான ஒரு பகுதி)

ஒருசமயம் பெரியவா ஸ்ரீமடத்துல இருக்கறச்சே, அவரை தரிசனம் பண்றதுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்துல ஆறேழுபேர் ஒரு குழுவா வந்திருந்தா. அவா நெத்தியல பளீர்னு இட்டுண்டிருந்த திருமண்ணே அவாள்லாம் வைஷ்ணவாங்கறதை உணர்த்தித்து. தங்களுக்குள்ளேயே எதோ மெதுவா பேசிக்கறதும், அடிக்கடி ஆசார்யாளை எட்டி எட்டிப் பார்க்கறதுமா இருந்தா அவா. அதே சமயம் அவாள்ல ஒருத்தர் மட்டும் தனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்லைங்கற மாதிரி நெட்டுக்குத்தான ஒரு பார்வையோட எந்த சலனமும் காட்டாம நின்னுண்டிருந்தார்.

மடத்துக்கு வைஷ்ணவா வர்றது ஒண்ணும் புதுசு இல்லையானாலும் அவாளோட செய்கைகள் எல்லாம்
கொஞ்சம் வித்யாசமா இருந்ததால,எல்லாரையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைச்சுது.

ஆச்சு, ஒருவழியா அவா பெரியவா முன்னால வந்து நின்னா யாரும் எதுவும் பேசலை. ஆனா, அவாளோட கண்ணுல இருந்து ஜலம் மட்டும் மளமளன்னு கொட்டித்து. ரெண்டு மூணு நிமிஷத்துக்கு அப்புறம் அவாள்ல ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“ஸ்வாமி, இவர் என்னோட தாய்மாமா.ரொம்ப நன்னா வேத மந்திரமெல்லாம் சொல்லிண்டு இருந்தார். திடீர்னு எதுனாலயோ இவரோட சித்த ஸ்வாதீனம் தவறிடுத்து. மனுஷா யாருன்னு அடையாளம் தெரியலை ; கார்த்தாலைக்கும் ராத்திரிக்கும் வித்தியாசம் தெரியலை. ஒரே இடத்தை வெறிச்சுப் பார்த்துண்டு பிரமைபிடிச்சாப்புல இருக்கார். எப்பத் தூங்கறார்.எப்போ முழிச்சுக்கறார்,என்ன பண்ணறார்ங்கற தெல்லாம் தீர்மானமே இல்லாம இருக்கு!” நாக்கு தழுதழுக்க சொன்னவர் கொஞ்சம் நிறுத்தி ஆசுவாசப்படுத்திண்டு பேச ஆரம்பித்தார்.

“குணசீலம்,சோளிங்கர்னு பெருமாள் க்ஷேத்ரங்களுக்கும் நாலஞ்சு திவ்ய தேசத் திருப்பதிகளுக்கும் அழைச்சுண்டுபோய் தரிசனம் பண்ண வைச்சோம்.இதைதவிர எங்க சக்திக்கு ஏத்த எல்லா சிகிச்சையும் பார்த்துட்டோம்.கொஞ்சம்கூட தெளிவு வரலை டாக்டர்களே என்னதுன்னு கண்டுபிடிக்க முடியாம குழம்பறா.

பெரியவாளைப் பார்த்தா தீர்வு கிடைக்கும்னு தோணித்து. அதான் தாமதிக்காம அழைச்சுண்டு வந்துட்டோம். நீங்கதான் அனுகிரஹம் பண்ணணும்!” சொல்லி முடிச்சார்,அவர்.

அப்போதான் எல்லாருக்குமே தெரிஞ்சுது.வெறிச்ச பார்வையோட நின்ன அந்த மனுஷருக்கு சித்தபிரமை பிடிச்சிருக்குங்கறது. எல்லாரும் பரிதாபத்தோட அவரைப் பார்க்கத் தொடங்கினா. அந்த சமயத்துல பரமாசார்யா , பாதிக்கப்பட்ட மனுஷரை வாத்சல்யத்தோட பார்த்தார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அதுக்கப்புறம் அவரைக் கூட்டிண்டு வந்தவாகிட்டே, “விஷ்ணு சகஸ்ரநாம பாராயண க்ரமத்துல வர்ற

“அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் !
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் !!

அப்படிங்கற ஸ்லோகத்தை நூத்தியெட்டுதரம் நீங்க எல்லாருமா சேர்ந்து சொல்லுங்கோ!” சொன்னார். மஹாபெரியவா.

பெரியவா சொன்னதும் அந்த ஸ்லோகத்தை கோரஸா அவ எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா. நூத்தியெட்டு தரம் சொல்லி முடிச்சுட்டு ஏதோ அதிசயம் நடக்கப் போறதுங்கறமாதிரி, புத்தி சுவாதீனம் இல்லாத அந்த மனுஷரைப் பார்த்தா.ஆனா,அவர் முன்னை மாதிரியே அப்படியே பிரம்மமேன்னுதான் நின்னுண்டு இருந்தார்.அடுத்ததா எல்லாரும் பெரியவாளைப் பார்த்தா.

“அவரை இங்கே அழைச்சுண்டு வந்து நிக்கவைங்கோ! (தன்னோட தலைல ஒரு இடத்தை சுட்டிக்காட்டின பெரியவா) அவரோட சிரசில இதோ இந்த இடத்துல கொஞ்சம் வலிக்கறாப்புல ரெண்டுதரம் குட்டுங்கோ!” அப்படின்னு சொன்னார்.

வந்தாவாளுக்கு சின்ன தயக்கம். என்னடா இது. ஏதோ ஸ்லோகம் சொல்லச் சொன்னார். சொன்னோம். இப்போ தலைல குட்டச் சொல்றாரே.இது எதுக்கு?ஏற்கெனவே மூளை குழம்பிப்போனவரை குட்டினா இன்னும் குழம்பித்தானே போவார்? இப்படியெல்லாம் யோசிச்சு அவா குழம்ப ஆரம்பிச்ச சமயத்துல,”என்ன தயங்கறேள், நான் சொல்றதை தைரியமாச் செய்யுங்கோ!” என்றார் பெரியவா.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

குட்டுப்பட்டதும் டக்குன்னு தூக்கத்துல இருந்து விழிச்சவர் மாதிரி கண்ணை உருட்டின வைஷ்ணவர் ,தன்னைக் கூட்டிண்டு வந்தவாள்ல இருந்த ஒருத்தரப் பார்த்து, “ஏண்டா,இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? நாம எப்போடா இங்கே வந்தோம்? இது எந்த ஊரு? எதுக்காக இங்கே வந்திருக்கோம்?-கேள்விகளை எழுப்பினார்.

அவரோட சித்த பிரமை முழுசா நீங்கிடுத்துன்னு புரிஞ்சுண்ட அவா அத்தனைபேரும் சாஷ்டாங்கமா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.”எல்லாம் உங்களோட அனுகிரகம்’னு –சொன்னார்கள்.

“இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதிகளுக் கெல்லாம் போயிருக்கேள் அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான் அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!–பெரியவா

பழம்,கல்கண்டு,துளசி பிரசாதங்களைக் குடுத்து அவாளை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories