December 7, 2025, 4:59 AM
24.5 C
Chennai

“மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம்


​”மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம். (‘மறுபிறவிக் கொள்கை,
கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ
நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது.
இந்தப் பிறவியில் ஒருவனை நல்லவனாக வாழ வைக்கக்கூடிய கருத்து என்பது
போற்றத்தக்கதுதானே?” சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார் பெரியவர்.)
மே 20,2017,-தினமலர்-மறு பிறவி உண்டா?-திருப்பூர் கிருஷ்ணன்.

ஒரு வெளிநாட்டு அன்பர், மகாபெரியவர் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தார்.
பெரியவரின் ஒளிதுலங்கும் திருமுகம், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவருக்கு
நெடுங்காலமாக ஓர் ஆன்மிக சந்தேகம். யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என
யோசித்துக் கொண்டிருந்தார். பெரியவரைப் பார்த்ததும், இவரே தம் சந்தேகத்தைத்
தீர்த்து வைக்கக்கூடியவர் என்று தோன்றியது.

பெரியவர் அவரிடம், ”ஏதோ கேட்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறதே?” என்றார்.

வந்தவர் மனதில் மனிதர்களுக்கு மறுபிறவி உண்டா என்பதில் சந்தேகம். அவரது மதம்
மறுபிறவி பற்றிச் சொல்லவில்லை. அந்தந்த பிறவியில் செய்த நல்வினை,
தீவினைக்கேற்ப இறப்பிற்கு பிறகு இறைவன் தீர்ப்புத் தருகிறான் என்பது அவர்
மதத்தின் விளக்கம். கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத புத்தர் கூட,
மறுபிறவிக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்து மதம் அவரவரின் நல்வினை,
தீவினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்று அறுதியிட்டுக் கூறுகிறது.

‘உண்மையில் மறுபிறவி உண்டா?’

கேள்வியைக் கேட்டதும், பெரியவர் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்முறுவல்
தோன்றியது.

‘அதிருக்கட்டும். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமே? இன்று மாலைக்குள்
காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறீர்களா?
அங்கு இன்று பிறந்துள்ள குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து, எடுத்து
வாருங்கள். நாம் மாலையில் பேசுவோம்!”

பெரியவர் ஆசி வழங்கிவிட்டு மடத்தின் உள்ளே சென்று விட்டார். வந்தவருக்கு
ஒன்றும் புரியவில்லை. மறுபிறவி பற்றி கேட்டால் மகப்பேறு மருத்துவமனைக்குப் போ
என்கிறாரே? அவர் சொல்லைத் தட்டியதாக இருக்கக் கூடாது. சரி; போவோம்.

அவர் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அன்று பிறந்த
குழந்தைகள் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டு மாலையில் மடத்திற்குத்
திரும்பினார்.

பெரியவர் அவரிடம், ”மருத்துவமனையில் என்ன பார்த்தீர்கள்?”

”நிறைய குழந்தைகளைப் பார்த்தேன்.”

”அவை ஒன்றுபோல் இருந்தனவா?”

”இல்லையில்லை. பல நிறங்கள். பல ஜாடைகள். வித்தியாசமாகத் தான் இருந்தன.”

”பிறந்த குழந்தைகளில் ஏன் இத்தனை மாறுபாடுகள்? கருணைக் கடலான இறைவன் எல்லோர்
மேலும் கருணையுள்ளவன் தானே? அப்படியிருக்க ஏன் ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு
விதமாகப் படைக்க வேண்டும்? ஒரே பிறவி என்றால் இறைவன் எல்லோரையும் ஒரே
மாதிரிதானே படைப்பார்? இந்த வேறுபாடு ஏன் வருகிறது என இந்து மதம் யோசித்தது.
இது தான் முற்பிறவியின் பலன் என்கிறது அது. இந்தக் கருத்தால் ஒரு பெரிய
நன்மையும் உண்டு..”சொல்லிவிட்டு, அந்த அன்பரை தீட்சண்யமாகப் பார்த்த பெரியவர்
பேச்சைத் தொடர்ந்தார்.

”மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ
நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க
வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை நல்லவனாக
வாழ வைக்கக்கூடிய கருத்து என்பது போற்றத்தக்கதுதானே?” சொல்லிவிட்டுக்
கலகலவெனச் சிரித்தார் பெரியவர்.

”மறுபிறவி பற்றி இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதில்லை! என்
சந்தேகமெல்லாம் தீர்ந்தது!” என்று சொல்லி விடைபெற்றார் அந்த அன்பர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories