December 5, 2025, 6:06 PM
26.7 C
Chennai

-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்.

246400 479182102136836 1433845875 n 1 - 2025

“அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு
வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை
ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள்.-(தொந்திரவாக இருக்கிறது
என்று சொன்ன தொண்டர்களிடம் பெரியவா-மேலே சொன்னது)

ஜூன் 10,2017-தினமலர்

காஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே
இருக்கும். மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக
ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள். புகழ்பெற்ற மடம்
இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி
பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு
செய்தனர்.

ஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள்
தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப்
பார்த்த பின் பேசினார்.

‘அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல
(மாலை) ஜனங்க அதிகம் வர்றதும், சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு
இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ? நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு
வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்?

சாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது? அது
நல்லதுதானே? அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம்பண்றோமா?
மூணுவேளை காயத்ரி ஜெபிக்கிறோமா?? அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப்
பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ?’

பரமாச்சாரியார் தொடர்ந்தார்:

‘எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே
இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச்
சேர்வோம் தானே! எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம்.

ஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா? எல்லா மதமும் சம
அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான்?
அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை
ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.’

சுவாமிகள் தொடர்ந்து சொன்னார்:

‘அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு
வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

பெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அன்பர்கள் விழிகளில் பக்திக்
கண்ணீர் தளும்பியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories