“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? “-பெரியவா

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து
சென்ற வித்யார்த்தி “படி படி’ என்று எச்சரிக்கை விட்டுண்டே
போனபோது-பெரியவா சொன்னது மேலே)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (179)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஏழுமலையான் சந்நிதியை நோக்கி நடைப்பயணம்
மலைப்பாதை வழியாக -பெரியவாள்.

கண்பார்வை மங்கியிருந்தது.

சமவெளியாக இருந்தால்,கால்களை நீட்டி வைத்துப்
போய்விடலாம்.ஆனால், இங்கே பாதையே படிகளால்
ஆனது.தொண்டர் வித்யார்த்தி நாராயணன் என்பவர்,
மகாப் பெரியவாளைக் கையை பிடித்து அழைத்துச்
செல்வது போல்,மிக அருகிலிருந்தபடி,’படி,படி’ என்று
உரத்த குரலில் சொல்லிக் கொண்டே வந்தார்.பெரியவாள்
கவனமாக காலை உயரத் தூக்கி மேலேயிருந்த படியில்
வைத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வித்யார்த்தியின் குரல், மலைகளில்,’படி,படி’ என்று
எதிரொலித்தது.பெரியவாள் ஒரு படியில் நின்றுவிட்டார்கள்.

“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு…”-பெரியவா

வித்யார்த்தி நடுங்கிப் போய் விட்டான்.

“பெரியவா மன்னிக்கணும். பெரியவா சரஸ்வதி ஸ்வரூபம்..”
அவசரப்பட்டு விட்டவனைப் போல உடைந்த குரலில்
கெஞ்சினான், வித்யார்த்தி.

“அப்போ…நான் இன்னும் பிரம்மஸ்வரூபம் ஆகலே..
என்கிறாயா?”

வித்யார்த்திக்குத் தொண்டையை அடைத்துக்கொண்டது.

பெரியவாள் லிமிட்டைத் தாண்ட மாட்டார்கள்.

“இனிமேல், படி வந்தால், “கோவிந்தா…கோவிந்தா..ன்னு
சொல்லு…புண்ணியமாவது கிடைக்கும்.

குன்றுகள் வித்யார்த்தியின் குரலை எதிரொலித்தன.
காற்றின் ஒவ்வொரு வீச்சிலும் ‘கோவிந்தா’க்கள்.

பெரியவாள் ஓர் இளஞரைப் போல, வேகமாகப்
படிகளில் ஏறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Entertainment News

Popular Categories