December 5, 2025, 9:42 PM
26.6 C
Chennai

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”………………..
..(-கிராமப் பிரமுகர்-பெரியவாளிடம்). 48412355 1990221147759856 1371637246662279168 n 1 - 2025

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா? (எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே)

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். இரண்டு தார்கள். ஒவ்வொன்றிலும் பத்துப் பன்னிரண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரை, இரண்டு பேர்கள் சுமக்க வேண்டியிருந்தது. கனம் என்பதால் மட்டும் இல்லை. பெரியவாள் திருமுன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் வரையிலாவது பழங்கள் நசுங்காமல் இருக்கவேண்டும்!

சிவாஸ்தானத்தில் பெரியவாள் தங்கியிருந்தபோது காட்டுப்புதூர் செல்வந்தரான ஒரு பக்தர்,மிகவும் ஆர்வத்துடன் கொண்டு வந்த காணிக்கை,அந்த வாழைத்தார்கள். அவருடன் பேசி, பிரசாதம் கொடுத்து அனுப்பியபின்,ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டார்கள், பெரியவாள்.

“இரண்டு தார்களையும் ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே வை. பழங்களைப் பாரேன்! – எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!…ஒரு பழம் சாப்பிட்டால் போதும். சாப்பாடே தேவையில்லை!.. நாலு நாளைக்கு உங்களுக்கெல்லாம் கவலையில்லை!”.

இல்லை. இந்த மாதிரி,பெரியவா உத்திரவிடவில்லை!

“….டேய்!..ரெண்டு தாரையும் கொண்டு போய்… வாசல்லே புளியமரம் இருக்கு பாரு? அதன் கிளையிலே,கைக்கு எட்டுகிற மாதிரி தொங்க விடு..”

(அநியாயம்..அக்ரமம்…பெரியவா இப்படியெல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. நான் இதை பலமாகக் கண்டிக்கிறேன் – என்று வாயைத் திறந்து சொல்லவே முடியாது என்பதிருக்கட்டும், மனத்தால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது)

சிவாஸ்தானம் – தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் வறுமையில் உழல்பவர்கள். பொறுப்பில்லாத பல ஆண்கள், நன்றாகக் குடித்துவிட்டுப் பசியோடு வீட்டுக்குப் போய், அங்குள்ள பெண்டு பிள்ளைகளைப் பயங்கரமாக அடித்து நொறுக்குவார்கள்.

வாழைத் தார் கட்டிய அன்று, அவ்வழியாகப் போனவர்கள் ஒவ்வொரு வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுப் போனார்கள். வயிற்றுப் பசி வெகுவாகக் குறைந்து விட்டதால், வீட்டில் அடி – அமர்க்களம் அளவாகவே இருந்தது.

(இந்த சூட்சுமம் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?)

மறுநாள், நிரந்தரமான ஓர் உத்திரவு பிறப்பித்தார்கள், பெரியவாள்;

“அடியார்கள் சமர்ப்பிக்கும் வாழைச் சீப்புகளைப் புளியமரத்துக் கிளையில் தொங்க விட வேண்டும்!”

சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு. அந்த கிராமப் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க…. குடிசையிலே பொம்பளைங்க சந்தோசமா இருக்காங்க..”

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா?

எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories