“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”………………..
..(-கிராமப் பிரமுகர்-பெரியவாளிடம்). 48412355 1990221147759856 1371637246662279168 n 1 - 2026

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா? (எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே)

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். இரண்டு தார்கள். ஒவ்வொன்றிலும் பத்துப் பன்னிரண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரை, இரண்டு பேர்கள் சுமக்க வேண்டியிருந்தது. கனம் என்பதால் மட்டும் இல்லை. பெரியவாள் திருமுன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் வரையிலாவது பழங்கள் நசுங்காமல் இருக்கவேண்டும்!

சிவாஸ்தானத்தில் பெரியவாள் தங்கியிருந்தபோது காட்டுப்புதூர் செல்வந்தரான ஒரு பக்தர்,மிகவும் ஆர்வத்துடன் கொண்டு வந்த காணிக்கை,அந்த வாழைத்தார்கள். அவருடன் பேசி, பிரசாதம் கொடுத்து அனுப்பியபின்,ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டார்கள், பெரியவாள்.

“இரண்டு தார்களையும் ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே வை. பழங்களைப் பாரேன்! – எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!…ஒரு பழம் சாப்பிட்டால் போதும். சாப்பாடே தேவையில்லை!.. நாலு நாளைக்கு உங்களுக்கெல்லாம் கவலையில்லை!”.

இல்லை. இந்த மாதிரி,பெரியவா உத்திரவிடவில்லை!

“….டேய்!..ரெண்டு தாரையும் கொண்டு போய்… வாசல்லே புளியமரம் இருக்கு பாரு? அதன் கிளையிலே,கைக்கு எட்டுகிற மாதிரி தொங்க விடு..”

(அநியாயம்..அக்ரமம்…பெரியவா இப்படியெல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. நான் இதை பலமாகக் கண்டிக்கிறேன் – என்று வாயைத் திறந்து சொல்லவே முடியாது என்பதிருக்கட்டும், மனத்தால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது)

சிவாஸ்தானம் – தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் வறுமையில் உழல்பவர்கள். பொறுப்பில்லாத பல ஆண்கள், நன்றாகக் குடித்துவிட்டுப் பசியோடு வீட்டுக்குப் போய், அங்குள்ள பெண்டு பிள்ளைகளைப் பயங்கரமாக அடித்து நொறுக்குவார்கள்.

வாழைத் தார் கட்டிய அன்று, அவ்வழியாகப் போனவர்கள் ஒவ்வொரு வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுப் போனார்கள். வயிற்றுப் பசி வெகுவாகக் குறைந்து விட்டதால், வீட்டில் அடி – அமர்க்களம் அளவாகவே இருந்தது.

(இந்த சூட்சுமம் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?)

மறுநாள், நிரந்தரமான ஓர் உத்திரவு பிறப்பித்தார்கள், பெரியவாள்;

“அடியார்கள் சமர்ப்பிக்கும் வாழைச் சீப்புகளைப் புளியமரத்துக் கிளையில் தொங்க விட வேண்டும்!”

சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு. அந்த கிராமப் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க…. குடிசையிலே பொம்பளைங்க சந்தோசமா இருக்காங்க..”

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா?

எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories