21-03-2023 1:19 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வரலட்சுமி விரதம், பூஜை முறை 20-08-2021 சங்கல்பம் (விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி)

    To Read in other Indian Languages…

    வரலட்சுமி விரதம், பூஜை முறை 20-08-2021 சங்கல்பம் (விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி)

    Varalakshmi Pooja 2
    Varalakshmi Pooja 2

    வரலட்சுமி விரதம், பூஜை முறை 20-08-2021 சங்கல்பத்துடன் (விக்னேஸ்வர பூஜை &
    ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி)

    வரலட்சுமி விரதம்… அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்!

    வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

    பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள்.

    அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

    varalaksmiviratham
    varalaksmiviratham

    இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

    முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாக பாடியிருக்கிறார்.

    கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும்.

    வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

    varalakshmi vratham 2019 date auspicious time in tamil3 1565177055
    varalakshmi vratham 2019 date auspicious time in tamil3 1565177055

    மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் விரிவாக…சாஸ்திரம் விதித்தபடி, விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    பூஜைக்குத் தேவையானவை

    மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

    நிவேதனப் பொருள்கள்

    பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

    பழ வகைகள்

    ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

    பூஜைக்கான முன்னேற்பாடுகள்

    வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்).

    மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

    (சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

    பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

    எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

    விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்ய வேண்டும்.

    மகாலாட்சுமியை பயபக்தியுடனும் உள்ளே அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

    (பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.)

    ப்லவ நாம சம்வத்ஸரே – தக்ஷிணாயனே – வருஷ ருதௌ – ஸிம்ஹ மாஸே – சுக்ல பக்ஷே – த்ரயோதஸ்யாம் சுபதிதௌ- பிருகு வாஸர – உத்ராஷாடா நட்சத்ர யுக்தாயாம் – ஆயுஷ்ய நாம யோக – கௌலவ / தைதுளை கரண – ஏவங்குண விசேஷன விசிஷ்டாஆம் அஸாம் – த்ரயோதஸாம் சுபதிதௌ —

    மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

    பூஜையை முழுமையாக நிறைவாகச் செய்ய விரும்புபவர்கள்… கீழே கொடுத்துள்ள பிடிஎஃப் .. வடிவினை இ புக் முறையில் படித்து … அனைத்தையும் பின்பற்றவும்…

    விக்னேஸ்வர பூஜை

    உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

    கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

    மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

    -என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

    அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

    இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|

    ” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
    ” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
    ” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
    ” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
    ” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
    ” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
    ” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
    ” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
    ” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
    ” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)

    புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

    ஓம் சுமுகாய நம: |
    ஓம் ஏகதந்தாய நம: |
    ஓம் கபிலாய நம: |
    ஓம் கஜகர்ணாய நம: |
    ஓம் லம்போதராய நம: |
    ஓம் விகடாய நம: |
    ஓம் விக்னராஜாய நம: |
    ஓம் விநாயகாய நம: |
    ஓம் தூமகேதவே நம: |
    ஓம் கணாத்யக்ஷாய நம: |
    ஓம் பாலசந்த்ராய நம: |
    ஓம் கஜானனாய நம: |
    ஓம் வக்ரதுண்டாய நம: |
    ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
    ஓம் ஹேரம்பாய நம: |
    ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
    ஓம் ஸித்திவிநாயகாய நம: |
    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
    |

    அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

    அம்ருதோபஸ்தரணமஸி |
    ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
    ஓம் அபாநாய ஸ்வாஹா |
    ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
    ஓம் உதாநாய ஸ்வாஹா |
    ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
    ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
    மஹாகணபதயே நம:
    அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
    அம்ருத பிதாநமஸி

    -என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்.

    பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

    வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
    நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

    -என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

    ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
    சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||

    என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

    பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

    கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
    நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
    ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
    என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

    கங்காயை நம:|
    யமுனாயை நம:|
    கோதாவர்யை நம:|
    ஸரஸ்வத்யை நம:|
    நர்மதாயை நம:|
    ஸிந்தவே நம:|
    காவேர்யை நம:|
    தாம்ரவர்ண்யை நம:

    என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

    குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
    குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

    என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

    அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
    ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரா ருஷய:
    (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)

    ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)

    ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)

    ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||

    பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

    ஆவாஹிதோ பவ|
    ஸ்தாபிதோ பவ|
    ஸந்நிஹிதோ பவ|
    ஸந்நிருத்தோ பவ|
    அவகுண்டிதோ பவ|
    ஸுப்ரீதோ பவ|
    ஸுப்ரஸன்னோ பவ|
    ஸுமுகோ பவ|
    வரதோ பவ|
    ப்ரஸீத ப்ரஸீத|

    தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
    தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

    -இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

    கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

    பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
    க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
    க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
    பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
    வரலக்ஷ்ம்யை நம:|

    என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

    பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
    என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

    ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
    ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
    வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|

    என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)

    ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

    பிறகு அங்க பூஜை செய்யவும்.

    முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

    பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

    ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரசத நாமாவளி

    ஓம் ப்ரக்ருத்யை நம:
    ஓம் விக்ருத்யை நம:
    ஓம் வித்யாயை நம:
    ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
    ஓம் ச்ரத்தாயை நம:
    ஓம் விபூத்யை நம:
    ஓம் ஸுரப்யை நம:
    ஓம் பரமாத்மிகாயை நம:
    ஓம் வாசே நம:
    ஓம் பத்மாலயாயை நம:
    ஓம் பத்மாயை நம:
    ஓம் சுசயே நம:
    ஓம் ஸ்வாஹாயை நம:
    ஓம் ஸ்வதாயை நம:
    ஓம் ஸுதாயை நம:
    ஓம் தன்யாயை நம:
    ஓம் ஹிரண்மய்யை நம:
    ஓம் லக்ஷ்ம்யை நம:
    ஓம் நித்யபுஷ்டாயை நம:
    ஓம் விபாவர்யை நம:
    ஓம் அதித்யை நம:
    ஓம் தித்யை நம:
    ஓம் தீப்தாயை நம:
    ஓம் வஸுதாயை நம:
    ஓம் வஸுதாரிண்யை நம:
    ஓம் கமலாயை நம:
    ஓம் காந்தாயை நம:
    ஓம் காமாக்ஷ்யை நம:
    ஓம் க்ரோதஸம்பவாயை நம:
    ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
    ஓம் புத்தயே நம:
    ஓம் அநகாயை நம:
    ஓம் ஹரிவல்லபாயை நம:
    ஓம் அசோகாயை நம:
    ஓம் அம்ருதாயை நம:
    ஓம் தீப்தாயை நம:
    ஓம் லோகசோக விநாசின்யை நம:
    ஓம் தர்மநிலயாயை நம:
    ஓம் கருணாயை நம:
    ஓம் லோகமாத்ரே நம:
    ஓம் பத்மப்ரியாயை நம:
    ஓம் பத்மஹஸ்தாயை நம:
    ஓம் பத்மாக்ஷ்யை நம:
    ஓம் பத்மஸுந்தர்யை நம:
    ஓம் பத்மோத்பவாயை நம:
    ஓம் பத்மமுக்யை நம:
    ஓம் பத்மநாபப்ரியாயை நம:
    ஓம் ரமாயை நம:
    ஓம் பத்மமாலாதராயை நம:
    ஓம் தேவ்யை நம:
    ஓம் பத்மின்யை நம:
    ஓம் பத்மகந்தின்யை நம:
    ஓம் புண்யகந்தாயை நம:
    ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
    ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
    ஓம் ப்ரபாயை நம:
    ஓம் சந்த்ரவதனாயை நம:
    ஓம் சந்த்ராயை நம:
    ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
    ஓம் சதுர்ப்புஜாயை நம:
    ஓம் சந்த்ரரூபாயை நம:
    ஓம் இந்திராயை நம:
    ஓம் இந்துசீதளாயை நம:
    ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
    ஓம் புஷ்ட்யை நம:
    ஓம் சிவாயை நம:
    ஓம் சிவகர்யை நம:
    ஓம் ஸத்யை நம:
    ஓம் விமலாயை நம:
    ஓம் விச்வஜனன்யை நம:
    ஓம் துஷ்ட்யை நம:
    ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
    ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
    ஓம் சாந்தாயை நம:
    ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
    ஓம் ச்ரியை நம:
    ஓம் பாஸ்கர்யை நம:
    ஓம் பில்வநிலயாயை நம:
    ஓம் வராரோஹாயை நம:
    ஓம் யசஸ்வின்யை நம:
    ஓம் வஸுந்தராயை நம:
    ஓம் உதாராங்காயை நம:
    ஓம் ஹரிண்யை நம:
    ஓம் ஹேமமாலின்யை நம:
    ஓம் தனதான்யகர்யை நம:
    ஓம் ஸித்தயே நம:
    ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
    ஓம் சுபப்ரதாயை நம:
    ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
    ஓம் வரலக்ஷ்ம்யை நம:
    ஓம் வஸுப்ரதாயை நம:
    ஓம் சுபாயை நம:
    ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
    ஓம் ஸமுத்ரதனயாயை நம:
    ஓம் ஜயாயை நம:
    ஓம் மங்களாதேவ்யை நம:
    ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
    ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
    ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
    ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
    ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
    ஓம் தேவ்யை நம:
    ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நம:
    ஓம் நவதுர்காயை நம:
    ஓம் மஹாகால்யை நம:
    ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம:
    ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
    ஓம் புவனேஸ்வர்யை நம:

    ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

    (குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக!)

    Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    5 × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...