திருப்புகழ் கதைகள்: விதுரன் வீட்டில் தங்கிய கிருஷ்ணர்!

thirupugazhkathaikal - 2026

திருப்புகழ்க் கதைகள் 229
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி
விதுரன் வீட்டில் தங்கினார்

ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை மரியாதை நிமித்தமாகப் பார்க்க சென்றபொழுது தங்களுடைய மக்கள் காட்டில் அல்லலுருவதற்காகக் குந்தி கதறி அழுதாள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் “பஞ்ச பாண்டவர்கள் தூக்கம், மகிழ்ச்சி, சோம்பல், பசி, தாகம், குளிர், வெப்பம் இவற்றை மறந்து துணிவுடன் இருப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். இராஜ்யத்தை போரிட்டுப் பெறுவதும் வனத்தில் வசிப்பதும் அவர்களைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். அவர்களுக்கு இரண்டுமே பேரின்பம் அளிக்கக் கூடியது. எனவே அவர்களைப் பற்றி கவலைப் படாதே” என்று குந்தியை சமாதானப்படுத்தினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் அத்தைக்கு சமாதானம் கூறும் முகமாக பாண்டவர்கள் தங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவார்கள் என்றும் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்கள் எந்த விதத்திலும் அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்பட மாட்டார்கள் என்பதையும் போர் தவிர்க்க முடியாதது என்பதையும் இதன் மூலம் குந்திக்குத் தெரியப் படுத்தினார். இருப்பினும் பங்காளிகள் நடுவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருப்பது பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற அவரது கோட்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே..

அன்றிரவு விதுரரின் வீட்டில் தங்கியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடன் ஆலோசனை செய்கிறார். விதுரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர் தூது நிமித்தமாக அத்தினாபுரம் வந்திருக்கக் கூடாது என்கிறார். ஏன் எனில் துரியோதனன் எப்படியும் பாண்டவர்களுக்குரிய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். அதற்கு மறுமொழியாக ஸ்ரீ கிருஷ்ணர், தான் துரியோதனனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்.

vidhura and sri krishna - 2026

மறுநாள் காலையில் துரியோதனனும் சகுனியும் ஸ்ரீ கிருஷ்ணரை தங்கள் சபைக்கு அழைத்துச் செல்ல விதுரரின் குடிலுக்கு வருகின்றனர். நிதானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, அந்த அவையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆற்றியப் பேருரையில் அவர் துரியோதனனிடம் பாண்டவர்களுடன் சமாதானமாக போகுமாறு கேட்டுக் கொள்கிறார். திருதராட்டினன் இந்த விஷயத்தில் மெளனமாக இருந்து விடுகிறான். “என்னால் ஒன்றும் செய்வதற்கில்லை. துரியோதனனைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி விடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மர், துரோணர் முதலியோர் காரண காரியங்களுடன் துரியோதனனிடம் செய்யவேண்டியதை எடுத்துரைகின்றனர். அவர்களுடைய புத்திமதிகள் துரியோதனனைக் கொதிப்படையச் செய்கிறது. முடிவில் அவன் கோபம் அதிகமாகி ஸ்ரீ கிருஷ்ணரை தூற்றும் அளவிற்கு சென்று விடுகிறான். பிறகு அவரை சிறை பிடிக்க தன் காவலர்களை ஏவுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூபமெடுக்கிறார். துரியோதனாதிகளைத் தவிர ஏனையோருக்கு விஸ்வரூப தரிசனம் கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணரைத் தன் வீட்டில் வைத்து உபசரித்ததற்காகவும், பாண்டவர்களுடன் சமாதானமாகப் போகச் சொன்னதிற்காகவும் துரியோதனன் விதுரரையும் அவரது தாயையும் இழித்துப் பேசுகிறான். அதனால் கோபமுற்று விதுரர் தன்னிடமிருந்த உலகை வெல்லும் ஆற்றலுடைய வில்லை ஒடித்து எறிந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. ஒருவர் நம்மைக் காட்டிலும் பெரியவரோ, சிறியவரோ, ஆணோ, பெண்ணோ, குழந்தையோ அல்லது முதியவரோ அவரது மனம் நோகும் வண்ணம் இகழ்ந்து பேசுதல் கூடாது.

இதனை “தருமதீபிகை”யில் கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் மிக அழகாகப் பாடுவார்.

வாய்மொழியால் மற்றோர் மனம்துடிக்க வைதாலும்
தீயகொலை என்றே தெளிமினோ – நேயமறக்
கொன்றவுயிர் அப்பொழுதே குப்புறுமால் அவ்வுயிர்தான்
நின்றுதுயர் கூரும் நினைந்து.

அதாவது மற்றவர் மனம் துடிக்கும்படி கொடிய சொல்லை வாயால் சொல்லினும் அதுவும் தீய கொலையாகும். கொலை அப்பொழுதே உயிரைப் போக்கிவிடும், புலையான சொல்லோ உள்ளத்தில் நிலையாய் நின்று நாளும் சித்திரவதை செய்யும். இவ்வாறு செய்யாது ஒழுகினால், எவ்வழியும் இன்பம் தொடர்ந்துவரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories