திருப்புகழ் கதைகள்: விதுரன் உணர்த்தும் நீதி!

thirupugazhkathaikal - 2026

திருப்புகழ்க் கதைகள் 230
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி
விதுரன் வரலாறு உணர்த்தும் தத்துவம்

தலையை வெட்டுதல், உடலைச் சிதைத்தல் முதலிய செயல்களால் கொலைகள் நிகழ்கின்றன. அவ்வாறு கொல்லப்பட்ட மனிதன் அப்பொழுதே இறந்து போகிறான்; அதன்பின் யாதொரு துன்பமும் தெரியாது. கொடிய பழிச்சொல் உடலை அழிக்காது; ஆயினும் உள்ளத்தை வதைத்து உயிரைத் துடிக்கச் செய்கிறது; அதனால் அது நெடிய அல்லலான பொல்லாத கொலையாம். தீயினால் சுடுவதினும் வாயினால் சுடுவது கொடிய துயரமாய் நெடிது நீண்டுள்ளது. இதனைத்தான் வள்ளுவர்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்று கூறுகிறார். விதுரன் நல்ல நீதிமான், சிறந்த வில் வீரன். அந்த மதிசிறந்தவரைத் துரியோதனன், அவையில் அனைவர் முன்னும் இகழ்ந்து பேசினான்.

முதல்வி ழைந்தொருவ னுடனி யைந்தபொருள்
..பற்றி யின்புறமு யங்கினும்,
அதிக மென்றபொரு ளொருவன் வேறுதரி
..அவனை யேயொழிய வறிவரோ,
பொதும டந்தையர்த மக்கு மண்ணிலிது
..புதுமை யல்லவவர் புதல்வனாம்,
விதுர னின்றவனொ டுறவு கொண்டதொர்வி
..யப்பை யென்சொலிவெ றுப்பதே. 126 – 27.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

(கிருட்டிணன் தூதுச் சருக்கம்)

துரியோதனன் கூறிய வசைமொழிகளை இப்பாடல் அழகாய்க் கூறுகிறது. பிறப்பை இளித்துப் பிழை தெளித்து நின்றது. அரசவையில் வைத்துத் தன்னைத் தாசிமகன் என்று ஏசியதைக் கேட்டதும் விதுரன் உள்ளம் கொதித்தது; உயிர் பதைத்தது; விரைந்தெழுந்து தன் வில்லை முறித்து எறிந்து இன்றோடு உன்னோடு என் உறவு ஒழிந்தது என்று உருத்து மொழிந்தான். அப்பொழுது அவன் உரைத்த மொழிகள் வெப்பமும் வெறுப்பும் விரிந்து வீரத் திறலோடு வெளிவரலாயின. அவை இங்கே உன்னி உணரவுரியன.

சொல்இ ரண்டுபுக லேனி னிசமரில்
..நின்று வெங்கணைதொ டேன்’எனா,
வில்இ ரண்டினுமு யர்ந்த வில்லதனை
..வேறி ரண்டுபட வெட்டினான்-
மல்இ ரண்டினையும் இருவர் ஆகிமுன்ம
..லைந்த காளமுகில் வந்துதன்
இல்இ ரண்டுதினம் வைகு தற்குலகில்
..எண்இ லாததவம் எய்தினான்.

அரச சபையில் வைத்துத் தன்னை வேசி மகன் என்று கூறிய அந்த வசைமொழி விதுரனுடைய உள்ளத்தை ஓயாமல் தகித்து வந்தது. ஒருவனை இழிவாகப் பழித்துப் பேசுவது கொல்லுகின்ற கொலையினும் கொடியது; தொலையாத துன்பமுடையது என்பதை உலகம் அவன் பால் உணர்ந்து தெளிந்தது.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இன்சொல் எவரையும் உறவாக்கி இன்பம் தருகிறது; புன்சொல் எவ்வழியும் வெவ்விய பகைகளை விளைத்து வெந்துயர் புரிகின்றது. உரையின் நலன் அளவே உயர்வுகள் உளவாகின்றன. இதனை சிறுபஞ்சமூலம்

இன்சொலான் ஆகுங் கிளைமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமைமன் – மென்சொல்லின்
ஓ’ய்’வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.

என இனிய சொல்லால் வரும் உறுதி நலங்களை உணர்த்துகிறது. ஏலாதியில் இதனைப் பற்றிக் கூறும்போது

சிதையுரையான் செற்றம் உரையான்சீ(று) இல்லான்
இயல்புரையான் ஈனம் உரையான் நசையவர்க்குக்
கூடுவ(து) ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து.

யாருக்கும் அல்லல் நேராமல் நல்ல வார்த்தைகளையே பேசிவரின் அவனைத் தேவர்கள் ஆசையோடு விரும்பி மகிழ்வர் எனக் கணிமேதையார் கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories