திருப்புகழ் கதைகள்: மருமலரினன்!

thiruppugazh stories - 2026

மருமலரினன் – பழநி

திருப்புகழ்க் கதைகள் 255
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெண்பத்தி ஒன்றாவது திருப்புகழ், ‘மருமலரினன்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும்.

இத்திருப்புகழில் “பழநியப்பா, பிறப்பு இறப்பைக் கடக்க, உமது திருவடியை வணங்கும் பேற்றை அருள்” என அருணகிரியார் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் …… வதையாலே

வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் …… வடிவாகி

இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி …… யசடாகும்

இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று …… பெறுவேனோ

திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை …… நெகிழாத

திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற …… பொறியாளர்

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் …… மருகோனே

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – இலக்குமியான சீதாதேவியுடன் அயோத்திமா நகரை விட்டு நீங்கி இருண்ட காட்டில் நடந்தவரும், இலங்கா புரியில் பெரிய தீ வைத்த அனுமானைக் கைவிடாதவரும், உறுதியுள்ள முத்தியை வழங்குபவரும், கம்சன் அனுப்பிய நயவஞ்சகச் சூழ்ச்சிகளை எல்லாம் கூர்மையாக அறிந்து வென்றவரும், அறிவாளரும், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருதமரங்களின் இடையே தவழ்ந்து சென்றவரும், பரமபதத்தின் நண்பருமாகிய திருமாலின் அன்புள்ள மருகரே;

தாமரை மலர்மீது வண்டுகள் ஒலிக்கின்ற சுனைகள் பல விளங்குகின்ற பரிசுத்தமான பழநிமலை மீது வந்து எழுந்தருளியிருக்கின்ற பெருமிதம் உடையவரே; நறுமணமுடைய நற்றாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விதித்து அனுப்ப, வினையை நுகரும் பொருட்டு, முடிவான பத்தாம் மாதத்தில் கருவினின்றும் பிறந்து, முன் செய்த வினையால் வந்த வகையை அறிந்து எழுந்து, தாய்ப்பாலை உண்டு, அழகிய மகவு என வளர்ந்து, குன்றுபோல் பருத்து, அழகுடன் விளங்கி, பெரிய காம மயக்கம் கொண்டு துவண்டு, பொதுமகளிரது வீடுகள் தோறும் சென்று, இரவு பகல் தெரியாது அங்கு அவருடன் உறவுகொண்டு, அதனால் கருவிகாரணங்கள் ஒடுங்கி, மூடனாகும் அடியேன், நல்வினை தீவினையென்ற வினைகளால் மூடப்பெற்ற பிறப்பு இறப்பு என்ற இவற்றை அகன்று, உமது இரு சரணாரவிந்தங்களை, வணங்கும் பேற்றினை என்று பெறுவேனோ? – என்பதாகும்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இத்திருப்புகழில் ஸ்ரீ இராமாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரக் காட்சிகள் சிலவற்றையும், மனிதனின் பிறப்பு பற்றிய தத்துவத்தையும் அருணகிரியார் அழகாக எடுத்தியம்புகிறார். இப்பிறவி வந்ததன் நோக்கம் பிறப்பு இறப்பில்லாத பெருமானை நினைந்து இருவினையற்றி, இனிப் பிறவாத தன்மையைப் பெறுதலேயாம்.

அதனை மறந்து மண், பெண், பொன், முதலிய ஆசைக் கடலில் வீழ்ந்து அறிவு மயங்கி கானல் நீர் கண்டு மயங்கும் மான் போல், துன்பத்தை இன்பமெனக் கருதி, விழலுக்கு நீரிறைத்து மக்கள் தமது அரிய மானுடப் பிறப்பை வறிதே கெடுத்து மடிகின்றார்கள். இறைவனை வணங்கினால் இந்த மாயப் பிறப்பறுக்கும் வகை சொல்லுவான். இதனை தாயுமானவர்

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்த மயக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான்.

எனக் கூறுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories